திருவனந்தபுரம், மார்ச் 14 - பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல்., நிறுவனத்தை தனியா ருக்கு தாரைவார்க்கும் முடிவில் இருந்து ஒன்றிய அரசு விலக வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சனியன்று கடிதம் எழுதினார். திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் எச்எல்எல் (Hindustan Lifecare Ltd), நாட்டின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி யாக இருக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான கை யுறைகள் போன்றவற்றை தயாரிப்பதில் இந்நிறுவனம் முன்ன ணியில் உள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம், பங்கு விலக்கலுக்கான நிதி அமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையால் (DIPAM) பட்டியலிடப் பட்டுள்ளது. தற்போது பெரும் லாபத்தில் இயங்கி வரும் எச்எல் எல் நிறுவனத்தை தனியாருக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் பிடிவாதமானது, கூட்டுறவுக் கூட்டாட்சி கொள்கை களை சீர்குலைப்பதாக உள்ளது என கேரள முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலத்துக்கு உரிமையுண்டு
மேலும், அரசமைப்புச் சட்டத் தின்படி, இதுபோன்ற விசயங்களில் மாநில அரசுகள் தாங்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஒன்றிய அரசு மறந்து வருகிறது. பொதுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், ஒன்றிய அரசிடம் மாநில அரசு ஒப்படைத்த நிலத்தில் எச்எல்எல் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. எனவே, உரிமையை ஒன்றிய அரசு விட்டுக் கொடுக்க முடிவு செய்யும் பட்சத்தில், எச்எல்எல் -ஐ மாநில பொதுத்துறை நிறுவனமாகத் தக்கவைத்துக் கொள்ள கேரளாவுக்கு உரிமை உண்டு. எனவே, எச்எல்எல் நிறு வனத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை கேரளா விடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அதன் ஏலத்தில் பங்கேற்க அனு மதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் கோரியுள்ளார். இந்நிலையில், லாபத்தில் இயங்கி வரும் எச்எல்எல் நிறு வனத்துக்கான ஏலம் திங்களன்று (மார்ச் 14) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாநில அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில், அதற்கு தடை விதித்து ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக எச்எல்எல் தொழிற்சங்கங்கள், பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கின. இதை அடுத்து, ஏலத்தில் பங்கேற்க கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தை மாநில அரசு நியமித்தது. எச்எல்எல் நிறுவனத்தை விற்றுத் தொலைப்பது தொடர்பாக தயாரிக்கப் பட்ட முதற்கட்ட தகவல் குறிப்பேடு (Preliminary Information Memorandum) மற்றும் ஏலத்தில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு உல களாவிய ரீதியில் விடுக்கப்பட்ட அழைப்பிதழில், 51 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு களைக் கொண்ட ஒன்றிய அரசு அல்லது ஒன்றிய பொதுத்துறை நிறுவன கூட்டுறவு சங்கங்கள் இதில் பங்கேற்க முடியாது. ஏலத்தில் மாநி லங்களோ அல்லது மாநிலங்களின் கீழ் உள்ள பொதுத்துறை நிறு வனங்களோ பங்கேற்கத் தகுதியற்ற வர்கள் என்று எங்கும் கூறவில்லை. இதுகுறித்து பிரதமரின் கவனத்து க்கும் முதல்வர் கொண்டு சென்றார்.