சாதிவாரி கணக்கெடுப்பு பிரிவினையை ஏற்படுத்தாது பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணைய தலைவர் தகவல்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெ டுப்பைச் சேர்க்க முடிவு செய்ததற்கு பட்டி யல் சமூகத்தினருக்கான தேசிய ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”சாதிவாரி கணக்கெடுப்பு சமூ கத்தில் இடைவெளிகளை உருவாக்கும் என்ற மறைமுகமான பிரச்சாரம் ஏற் படுத்தப்படுகிறது. இது தவறானது. சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப் பட்ட தரவு, கொள்கை முடிவுகளுக்கு அடித்தளமாக அமையும். அதே போல பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்த உதவும். குறிப்பாக சாதிவாரி கணக்கெ டுப்பு சமூக நீதியை வலுப்படுத்துமே தவிர பிரிவினையை ஏற்படுத்தாது” என அவர் கூறினார். மும்பை
வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்? மகாராஷ்டிராவில் 21 இளைஞர் பலி
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. கேரளா, மகா ராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வால் பாதிக்கப்படுவர்களின் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்து வரு கிறது. ஆனால் தற்போது பரவி வரும் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் துணை திரிபு) தீவிரத் தன்மையற்றது ஒன்றிய அரசு கூறி இருந்தது. கர்நாடகாவிலும்... இந்நிலையில், மகாராஷ்டிரா மாநி லம் தானேவில் 21 வயது இளைஞர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலை யில், ஞாயிறன்று சிகிச்சைப் பலனின்றி அந்த இளைஞர் பலியானதாக தானே நகராட்சி நிற்வகம் தெரிவித்துள்ளது. அதே போல கர்நாடகத்தில் 84 வயது முதி வர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி யுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. வீரியம் குறைந்த கொரோனா ஒன்றும் செய்யாது என கூறப்பட்டு வந்த நிலை யில், ஒரே நாளில் கொரோனாவுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி
லைபீரிய கொள்கலன் கப்பல் கடலில் மூழ்கியது
கேரளக் கடற்கரையில் அபாய கரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற் படையுடன் இணைந்து இந்தியக் கட லோரக் காவல்படை மீட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்எஸ்சி எல்சா 3 (எம்ஓ எண். 9123221) இன்று (மே 25, 2025) காலை 7:50 மணி யளவில் கொச்சி கடற்கரையில் மூழ்கி யது. அதில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். 21 பேரை இந்தியக் கட லோரக் காவல்படையும் மூன்று பேரை இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதாவும் மீட்டன. எம்எஸ்சி எல்சா 3 கப்பல் 640 கொள்கலன்களுடன் மூழ்கி யது. அவற்றில் 13 ஆபத்தான சரக்குக் கொள்கலன்களும் 12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்தன. அதில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் ஆகிய வையும் ஏற்றப்பட்டிருந்தன” என அதில் கூறப்பட்டுள்ளது.