states

img

ஜெகன் மோகன் மீது வழக்கு

ஜெகன் மோகன் மீது வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரு மான ஜெகன் மோகன் ரெட்டி ஞாயிறன்று ஆந்திர மாநிலத்தின் பல்நாடு மாவட்டம், ரெண்டபல்லா கிரா மத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றார். குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ஜெகன்மோ கன் ரெட்டி காரில் வீடு திரும்பியுள்ளார்.  அப்போது எட்டுகுரு புறவழிச்சா லை அருகே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கை யா (62) என்பவர் ஜெகன்மோகன் ரெட்டி யை வரவேற்பதற்காகச் சென்றுள்ளார். இதனை கண்ட ஜெகன் மோகன் காரை நிறுத்த சொல்லியுள்ளார். அப்போது, ஜெகன் மோகனின் காரின் மீது தொண்டர்கள் சிலர் ஏறினர். செல்லி சி ங்கையாவும் காரின் மீது ஏற முயன்ற தாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி காரின் அடியில் சிங்கையா கீழே  விழுந்துள்ளார். இதனை ஜெகன் மோகன், தொண்டர்கள் என யாரும் கவ னிக்காத நிலையில், ஓட்டுநரும் காரை  முன்னோக்கி இயக்கியுள்ளார். இதில் செல்லி சிங்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி, உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி, முன் னாள் எம்.பி., சுப்பா ரெட்டி, முன்னாள்  அமைச்சர் ரஜினி, முன்னாள் எம்எல்ஏ பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது பல்நாடு மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநரான ரமண ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.