states

டிசம்பரில் 4ஜி சேவை; 2024-இல் 5-ஜி சேவை

புதுதில்லி, அக்.29- பொதுத் துறை நிறுவனமான பிஎஸ் என்எல் 4-ஜி சேவையை வரும் டிசம்ப ரில் அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளது. முதலில் சிறிய அளவில் அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னர்  அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் 4-ஜி சேவை  விரிவாக்கம் செய்யப்படும்’ என்று பிஎஸ்என்எல் தலைவர் பி.கே.புர்வார் தெரிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற இந்தியக் கைப்பேசி மாநாட்டில் பங்கேற்ற அவர்  பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய தாவது:- ‘பிஎஸ்என்எல் அதன் வாடிக்கை யாளர்களுக்கு 4-ஜி சேவையை அறிமுகப் படுத்த உள்ளது. குறிப்பாக, பஞ்சாப்பில் வரும் டிசம்பரில் இச் சேவை அறி முகப்படுதத்தப்படும். இதற்கென 200 பகுதிகளில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மாநி லத்தில் மேலும் 3,000 பகுதிகளில் தொழில்நுட்ப வசதிகளை நிறுவு வதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.  4-ஜி சேவை கட்டமைப்பு படிப்படியாக ஒவ்வொரு மாதமும் 6,000, 9,000, 12,000 பகுதி களாக அதிகரிக்கப்படும். வரும் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் இந்தச் சேவையை விரிவு படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ஜி சேவை அமலாக்கம் நிறைவு பெற்றதும், 5-ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான போதுமான அலைக் கற்றையை பிஎஸ்என்எல் பெற்றிருக் கிறது.  2024 ஜூன் மாதத்துக்குப் பிறகு 4ஜி சேவையை 5ஜி சேவையாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான ஸ்பெக்டர்ம் பிஎஸ்என்எல்-நிறு வனத்திடம் உள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார். ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான ஐடிஐ ஆகி யவை 5-ஜிக்கு மேம்படுத்தக்கூடிய 4-ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்து வதற்காக பிஎஸ்என்எல்லிட மிருந்து சுமார் ரூ.19,000 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.