states

img

கடந்தாண்டும் ரூ. 271 கோடியைத் தூக்கிக் கொடுத்தது 2020-21இல் புரூடண்ட் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.209 கோடி நன்கொடை!

புதுதில்லி, டிச.2- புரூடண்ட் அறக்கட்டளை என்ற அமைப்பானது, 2020-21 நிதியாண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ. 209 கோடியை தேர்தல் நன்கொடையாக வாரி வழங்கி யுள்ளது. புரூடண்ட் அறக்கட்டளை 2020-21 நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு ரூ. 245 கோடியே 70 லட்சத்தை தேர்தல் நன்கொடையாக தூக்கிக் கொடுத்துள் ளது. இதில் 85 சதவிகித நன்கொடை பாஜகவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள் ளது. ரூ. 209 கோடியை பாஜக நன் கொடையாக பெற்றுள்ளது.  பாஜகவின் கூட்டணிக் கட்சியான- நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் தாராளமாக ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதே புரூடண்ட் அறக்கட்டளை காங்கிரஸூக்கு ரூ. 2 கோடியை மட்டுமே நன்கொடையாக வழங்கியுள்ளது. முந்தைய 2019-2020 நிதியாண்டில் காங்கி ரஸூக்கு ரூ. 31 கோடியை புரூடண்ட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரூ. 2 கோடியாகக் குறைத் துள்ளது. சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 5 கோடி, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட் ரிய ஜனதாதளம் கட்சிக்கு ரூ. 5 கோடி, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.1 கோடியே 70 லட்சம், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு ரூ. 1 கோடி என புரூடண்ட் அறக்கட்டளை தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட் டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2019-20 நிதியாண்டிலும் புரூடண்ட் அறக்கட்டளை பாஜகவுக்கு 271 கோடி யே 50 லட்சத்தை நன்கொடையாக அளித் திருந்தது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் புரூடண்ட் ரூ. 11 கோடியே 26 லட்சத்தை வாரி வழங்கியிருந்தது.

;