துனிஸ், ஏப்.10- துனிசியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 13 பேர் பலியாகினர். புலம்பெயர்ந்தோர் 10 பேர் காணாமல் போயுள்ள னர் மற்றும் 19 பேர் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட உடல்களில் நான்கு பெண்களும், நான்கு குழந்தைகளும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய மாதங்களில், துனிசியா மற்றும் லிபியாவி லிருந்து இத்தாலியை நோக்கி ஐரோப்பாவிற்கு கடக்கும் முயற்சிகள் அதிகரித்து, துனிசிய கடற்கரையில் டஜன் கணக்கான மக்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.