மும்பை, ஏப்.7- மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (MNS) கட்சியின் தலை வர் ராஜ் தாக்கரே, கடந்த சனிக்கிழமையன்று மும்பை சிவாஜி பூங்காவில் பேசுகை யில், “மசூதிகளில் ஒலிபெருக்கி களை அகற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கி றேன். ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், அதே மசூதி கள் முன்பு ஒலிபெருக்கிகள் அமைத்து அனுமன் பாடல் களை அதிக சப்தத்துடன் ஒலிக்க விடுவோம்” என்றார். அதுபோலவே, மும்பை காட்கோபரில் உள்ள நவ நிர் மான் சேனா கட்சி அலுவல கத்தில் ஒலி பெருக்கிகளை வைத்து அனுமன் பாடல்கள் சப்தமாக ஒலிபரப்பப்பட்டன. இதன்மீது நடவடிக்கை எடுத்த, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு, நவ நிர்மான் சேனா வின் நிர்வாகி மகேந்திர பானு ஷாலியை கைது செய்தது. இந்நிலையில், தாதரில் உள்ள சிவசேனாவின் அலு வலகத்திற்கு வெளியே, “பால் தாக்கரேவின் உண்மையான வாரிசு, மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேதான்” என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. “மாண்புமிகு பாலா சாகேப்.. பாருங்கள், உங்கள் மகன் முதல்வர் உத்தவ் தாக் கரே ஒரு இந்துவாக உள்ளார். ஆனால், அனுமன் பாடல்கள் பாடுவதைத் தடை செய்கிறார். இந்துக்கள் பொருத்தியிருந்த ஒலி பெருக்கிகள் அகற்றப் பட்டு வருகின்றன. உங்கள் தாக் கரே பாணி மற்றும் பாரம்பரி யம் ஆகியவை மாண்புமிகு ராஜ்சாகேப் தாக்கரே அவர் களால் மட்டுமே உண்மையாக பின்பற்றப்படுகிறது” என்று நவ நிர்மான் சேனா பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவசேனாவின் இந்து சார்பு பிம்பத்தை உடைப்பதற்காக, ராஜ்தாக்கரேவையும், அவரது நவ நிர்மான் சேனாவையும் வைத்து பாஜக செய்யும் வேலைதான் இது! அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.