states

img

நேரலை நிகழ்ச்சியில் பாஜக வேட்பாளருக்கு அடி

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30 அன்று சட்டமன்ற  தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சி களுக்கு இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. இதில் பாஜக அங்கு மும் முனை போட்டி நிலவுவதாக காண்பிக்க முயற்சிக்கிறது. இந்நிலையில், தனியார்  டி.வி. சேனல், தேர்தல் அரசியல் சார்பு நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றை புத னன்று (?) நடத்தியது. பொது இடத்தில் மேடை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த விவாத நிகழ்ச்சியில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ விவேகானந்தர் மற்றும் பாஜக வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுடு ஆகியோர் பங்கேற்றனர். பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடு பிஆர்எஸ் கட்சியை ஆதாரமின்றி விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் விவேகானந்தர் பாஜக வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார். இதனை நேரடியாக பார்த்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந் தனர். இந்த விவகாரத்தால் விவாத நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.