காவிரியில் இருந்து தமிழ்நாட் டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து பாஜக மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர், கர்நாடக மாநிலம் விதான்சவுடா பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.குமாரசாமி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசுகையில், “கர் நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் திமுக ஏஜெண்டுகளாக செயல்படுகின்ற னர். சமரச அரசியல் செய்கின்றனர். தமிழ் நாட்டின் ஏஜெண்டாக நடந்து கொள்கிறார் கள். இதை சாதாரணமாக எடுத்துக் கொள் ளக் கூடாது” என்று, தமிழ்நாட்டிற்கு எதி ராக கர்நாடக மக்களை கொம்புசீவி விடும் வேலையைச் செய்துள்ளார்.