states

தில்லி அரசின் அதிகாரத்தை ‘அபகரித்தது’ மோடி அரசு!

புதுதில்லி, ஆக. 8 - தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சின் அதிகாரங்களைப் பறிப்பதற்கான ‘தில்லி சேவைகள் சட்ட மசோதா’வை (Delhi Service Bill), ஒன்றிய பாஜக அரசானது, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவை யிலும் நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. தில்லி சேவைகள் சட்ட மசோதா வை ஏற்கெனவே மக்களவையில் நிறை வேற்றிய மோடி அரசு, மாநிலங்களவை யில் போதிய பெரும்பான்மை இல்லாத தால், தயக்கம் காட்டி வந்தது.  மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆகும். காலியாக இருக்கும் 8 இடங்கள் போக, தற்போதைய பலம் 242 ஆக இருந்தது. இதில், பாஜக கூட்டணிக்கு 111 எம்.பி.க்களும், இந்தியா கூட்ட ணிக்கு 99 எம்.பி.க்களும் இருந்தனர். இரண்டு கூட்டணியிலும் இல்லாத கட்சி களின் உறுப்பினர்கள் 28 பேர்களாக இருந்தனர்.  இந்நிலையில், மாநிலங்களவை யில் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால், 122 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில், தில்லி மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்டணிக்கு கூடுத லாக 11 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப் பட்டது. 

எனவே, மோடி அரசானது, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமை யிலான தெலுங்குதேசம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவைப் பெறு வதற்கான வேலைகளைச் செய்து வந்தது. அந்தக் கட்சிகளும் ‘வேறு வழியில்லாததால்’ ஆதரவு அளிக்க முடிவு செய்தன. இந்நிலையில்தான், ‘தேசிய தலை நகர் தில்லி பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023’ (Government of National Capital Territory of Delhi - Amendment - Bill 2023) எனப்படும் ‘தில்லி சேவைகள் சட்ட மசோதாவை’ (Delhi Services Bill) திங்களன்று மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விட்ட மோடி அரசு,  தலா 9 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் கட்சிகள், 4 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் அதிமுக, ஒரே ஒரு  எம்.பி.யைக் கொண்டிருக்கும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆத ரவுடன், தில்லி சேவைகள் மசோதா வை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 102 வாக்குகளும் பதிவாகின.

மக்களாட்சியின் கறுப்பு நாள் : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளை மக்களாட்சியின் கறுப்பு நாள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “தலைநகர் தில்லியை  ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும், தில்லி சேவைகள் சட்டமசோதா (#DelhiServicesBill) மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள் (07.08.20223), மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக அரசின் (@BJP4India -வின்)  பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை தில்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!. மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், தில்லியைச் சிதைக்கத் துடிக்கும் பாஜக-வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் (அதிமுக) ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பாஜக-வின் பாதம் தாங்கி, ‘கொத்தடிமையாக’ தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.