குளிர்கால ஒலிம்பிக்ஸ் நெருங்கிவிட்டதால் சீனாவில் போட்டிகளுக்கான இறுதி கட்ட ஏற்பாடு கள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன. கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ராஜாங்க ரீதியான புறக்கணிப்புக்கு இடையே, திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி கள் நடைபெறும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.இதனையடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் சீனாவில் சங்க மிக்கின்றனர். போட்டிகள் தொடங்க இன்னும்18 நாட்கள் உள்ள நிலையில் இப்போதே களைகட்டிவிட்டது பெய்ஜிங், யாங் ஜிங், ஜாங் ஜியாகோ மாகாணங்கள். 24 ஆவது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்துவதற்காக போட்டி யிட்ட மூன்று நகரங்களில் இறுதியாக சீனாவின் பெய்ஜிங் நகரமே வெற்றி பெற்றது. இந்நகரமே கோடைக் கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி களை நடத்தும் முதல் நகரமாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக்ஸ் போன்றே குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் குளிர் காலத்தில் மட்டுமே விளையாடக் கூடிய ஆல்பைன் பனிச்சறுக்கு, பையத்லான், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, பிகர் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், பனிச்சறுக்கு தாண்டுதல், பனி பலகை, ஃபிகர் ஸ்கேட்டிங், விரைவு பனிச்சறுக்கு, விரைவு மற்றும் குறுகிய வேக பனிச்சறுக்கு, பனிக்கட்டி ஹாக்கி என 15 பிரிவுகளுக்கு மேல் 109 நிகழ்வுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோலாகலம்...
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக்ஸ் “பசு மை விளையாட்டு” என்ற இலக்குடன் சீன அரசாங்கம் நடத்துகிறது.
ரூ.2 லட்சம் கோடி....
பல்வேறு சவால்களுக்கு மத்தி யிலும் விளையாட்டு அரங்கங்களில் கட்டுமானங்கள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளது மக்கள் சீன அரசாங்கம். போட்டிகள் நடைபெறும் 26 இடங்களி லும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்து கிறது. போட்டிகளை நடத்துவதற்காக 3.9 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி 2,90,00,36,10,000) அமெரிக்க டாலர்களைச் செலவிடுகிறது மக்கள் சீனக் குடியரசு.
முயல் வேகம்...
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் கிரா மங்களில் கோவிட்-19 நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் சீனா மிகக் கவனமாக செயல்பட்டு வரு கிறது. ஒமைக்ரான் மிரட்டலும் ஒலிம்பிக்ஸ் ஏற்பாட்டுக் குழுவுக்குச் சவாலாக அமைந்தது. இதனையும் எதிர்கொள்ள, 2ஆயிரத்திற்கும் அதிக மான விளையாட்டாளர்கள், போட்டி க்குத் தொடர்புடைய சுமார் 25 ஆயிரம் பேர் விளையாட்டு கிராமத்தில் கள மிறக்கி இருக்கிறது சீன அரசு. அவர் களில் பெரும்பாலானவர்கள் வெளி நாட்டவர்கள். கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ள 3 வயது முதல் தகுதி படைத்த 121 கோடி மக்களில் 90 விழுக்காட்டை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் 100 விழுக் காடு செலுத்திய முதல் நாடு என்கிற நிலை யை எட்டி உலக சாதனை படைக்கிறது
ஜனாதிபதி ஜின்பிங்...!
ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பிரம்மாண்ட மாக நடத்தி மிகவும் பிரபலமான ‘பறவைக்கூடு’ என்று செல்லமாக அழைக்கப்படும் தேசிய மைதானத்தில் தான் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறுகிறது. மக்கள் சீனக் குடியரசு தலைவர் ஜி ஜின்பிங் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். இதற்காக 91ஆயிரம் பேர் அமரக்கூடிய தேசிய விளையாட்டு மைதானம் மீண்டும் புதுப்பித்து புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. இங்கு போட்டிகள் எதுவும் நடைபெறாது என்றாலும், கண்கவர் நிகழ்ச்சிகளை பார்த்து பரவச மடைய சீன நாட்டின் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“ஐஸ் கியூப்”
சுமார் 45ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய நீச்சல் குளங்கள் நிறைந்த தேசிய நீர்வழி மையம் மறுகட்டமைப்பு செய்து மற்றொரு சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது ‘வாட்டர் கியூப்’ என்று இந்த மைதா னத்திற்கு பெயரிடப்பட்டது. இப்போது குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டு களில் கர்லிங் போட்டிகளை நடத்து வதற்கு ‘ஐஸ் கியூப்’ என்று பெயர் மாற்றி யுள்ளனர்.
புதுமையிலும் அசத்தல்!
ஓசோன் படலத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் இயற்கை கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த பனிக் கட்டிகளாக மாறும் மைதானங்களை ‘ஒலிம்பிக்ஸ் கிரீன்’ என்ற பெயரில் புதுமையாக 12ஆயிரம் சதுர அடியில் 12 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ‘தி ஐஸ் ரிப்பன்’ என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ள 22 மிதக்கும் ரிப்பன் அரங்குகள் நிறைந்த நேஷனல் ஸ்பீட் ஸ்கேட்டிங் மைதானத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடித்துள்ளனர். இதுமட்டுமின்றி, சுமார் 18ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கக் கூடிய தேசிய உள்விளையாட்டு அரங்கம், 863 கண்ணாடி தூண்களை உள்ளடக்கிய திரைச் சுவர் நிறைந்த அரங்கம், எலும்புக்கூடு வடிவத்தில் தேசிய நெகிழி மையம், சீன அலங்கார பொருட்களை போன்று ‘எஸ்’ வகையான வளைவு களைக் கொண்டு ‘ஸ்னோ ரூயி’ பாரம்பரிய சீன மடிப்பு விசிறியை ஒத்த வடிவமைப்பின் ‘திஃபேன்’ என்ற புனைப் பெயரில் அரங்குகளையும் புதிது புதிதாக அமைத்திருக்கிறது சீன அரசு.
சவாலுக்கு சவால்!
கம்யூனிச சித்தாந்தத்தின் மீதான தனது எதிர்ப்பை காட்டி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆப்கானிஸ்தான் போரைக் காரணம் காட்டி,1980 ஆம் ஆண்டில் மாஸ்கோ நகரில் சோவியத் யூனியன் நடத்திய ஒலிம்பிக்ஸ் போட்டியை அமெரிக்கா புறக்கணித்த நிலையில், 80 நாடுகளை சேர்ந்த 5,179 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று மிக பிரம்மாண்டமாக நடந்ததால் மூக்கறுக்ப்பட்டது. தற்போது, மக்கள் சீன குடியரசு சீனா அரசாங்கம் நடத்தும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அரசு அதிகாரி களை அனுப்பாமல் வீரர்களை மட்டுமே அனுப்புவோம் என்றது. அதன் நேச நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, பிரிட்டன், கனடா என சில நாடுகள் மட்டுமே அமெரிக்கா பக்கம் உள்ளதால் இப்போதும் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு பதிலடி கொடுத்த சீன வெளி யுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்,”;தங்கள் மீது வீணாக பழிபோட்டு, ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்கிறது. போட்டியை புறக்கணிக்கும் நாடுகளை அந்நாட்டு மக்களும் விளையாட்டு வீரர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துக் காட்டினர் அமெரிக்க மக்கள்” என்றார். சிஜிடிஎன் எனும் சீன சர்வதேச தொலைக் காட்சி நிறுவனத்தின் வட அமெரிக்க நிலையம் வாஷிங்டன் தலைநகர் விளையாட்டு அரங்கில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளை யாட்டுக்கான விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் அமெரிக்கா அரசின் எதிர்ப்புகளையும் மீறி பங்கேற்ற மக்கள் பலரும் ஆதரவும் வாழ்த்தும் தெரி வித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், வட கொரியாவின் ஒலிம்பிக் குழு, சீன விளை யாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில்,”பகை மை உணர்வு கொண்ட நாடுகளின் செயல்களாலும், கிருமிப் பரவல் அபாயங்களாலும் ஒலிம்பிக்ஸ் விளை யாட்டுகளில் தங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அருமையான, அற்புதமான ஒலிம்பிக்ஸ் திருவிழாவை நடத்தும் சீன தோழர்களை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம். சீனா ஒலிம்பிக்ஸ் போட்டிகளை வெற்றிகரமாகத் தொடங்கு வதைத் தடுக்கவும் உலகில் சீனாவின் நன்மதிப்பைக் குறைக்கவும் சில நாடுகள் முயல்கிறது” என்று வட கொரியா தெரிவித்திருக்கிறது.
உறவுகளைப் பாதுகாப்போம்!
ட்டியின் சமீபத்திய முன்னேற்பாடு கள் குறித்து அந்நாட்டின் உயர் அதி காரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது,” அனைத்து தரப்பினரும் எதிர்காலத்தில் பரஸ்பரம் உறவை பாதுகாத்துக் கொள்வதற்காக ‘ஒன்றிணைவோம்’ என்பதே இந்த ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் என்றும் இதற்கு ‘மோட்டோ’ என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் அறிவித்தனர். இந்த குறிக்கோள் அறிமுக விழாவில் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
கலாச்சார கிராமம்!
பெய்ஜிங்கின் நகர மையத்தி லிருந்து வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள யாங்கிங் மண்டலம். சூடான நீரூற்றுகள், தேசிய பூங்காக்கள், பனிச்சறுக்கு விடுதிகள் மற்றும் சீனப் பெருஞ்சுவரின் படாலிங் உள்ளடக்கிய சீனா தலை நகரின் மலைப்பாங்கான புறநகர்ப் பகுதி யாங்கிங். இங்கு மலை கிராமங் களின் கலாச்சார பண்புகளின்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒலிம்பிக்ஸ் கிராமம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 1,430 விளையாட்டு வீரர்கள் மற்றும் குழு அதிகாரிகள் தங்கலாம்.
வானுயர்ந்த கட்டடங்கள்...
பெய்ஜிங் நகரின் வட மேற்கில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது ஜாங் ஜியா கோவ். இதுவும் மிக பிரபலமான பகுதியாகும். இங்கு உள்ள வானுயர்ந்த கட்டடங்கள் சீனாவுக்கு பெருமை சேர்ப்பதாகும். இந்தப் பகுதியில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது ஒலிம்பிக்ஸ் கிராமம். 2, 640 வீரர்கள் மற்றும் அதி காரிகள் தங்குவதற்கான அனைத்து ஏற் பாடுகளையும் செய்து முடித்திருக்கிறது சீன அரசு. எளிமை, பாதுகாப்பு என்று சிறந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம், உலகிற்கு ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஆற்றலைக் கொண்டு வருகிறது மக்கள் சீன அரசு!
- ஸ்ரீராமுலு