பெங்களூரு, மே 7- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் வீர சைவ லிங்காயத்து கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது, பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் மே 10 அன்று வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. மே 13-ஆம் தேதி வாக்கு கள் எண்ணப்பட உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். பாஜகவிற்கு கடும் அதிர்ச்சி இந்நிலையில், கர்நாடக அரசி யல் களத்தில் முக்கிய வாக்கு வங்கி யாக இருக்கும் லிங்காயத்துகள் சமூ கத்தின் வீரசைவ பிரிவினர்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து, அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டு கோள் விடுத்துள்ளது. கர்நாடக அர சியல் களத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளனர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர்.
பெலகாவி, தார்வாட், கடக் ஆகிய மாவட்டங்களில் பெருமளவிலும், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார், ராய்ச்சூர் ஆகிய இடங்களி லும் கணிசமான அளவில் உள்ளனர். பெங்களூரு, மைசூர் மற்றும் மாண்டி யாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இதுபோக தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளின் முடிவுகளை தீர்மா னிக்கக் கூடியவர்களாக லிங்கா யத்துகள் உள்ளனர். குறிப்பாக லிங்காயத்துகள் ஆதரவு மற்றும் அவர்கள் வாக்க ளிக்கும் விதம்தான் கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்ற நிலையில், பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வரும், லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பாலியில் கடந்த 2 நாட்களுக்கு முன் லிங்காயத்து வீர சைவ அமைப் பின் தலைவர்களை சந்தித்து காங்கி ரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார். அதன்பிறகு ஞாயிறன்று வீரசைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அக்கட்சிக்கு வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மோடி இருக்கும் பொழுதே அதிர்ச்சி
கர்நாடக அரசியல் காலத்தில் லிங்காயத் சமூகத்தினர் பெரும்பா லும் பாஜகவிற்கு வாக்களித்து வந்த னர். அதுவும் லிங்காயத் சமூகத்தி னர் முக்கிய தலைவரான எடியூரப்பா வின் அரசியல் காலத்தில் இருந்து, லிங்காயத்துகள் பெரும்பான்மை யாக இருக்கும் தொகுதிகள் பாஜக வின் கோட்டையாக உள்ளது. எடி யூரப்பா - பாஜக மோதல் விவகாரம் ஏற்கெனவே பாஜகவிற்கு கலக் கத்தை ஏற்படுத்திருந்த நிலையில், லிங்காயத்து பிரிவை சேர்ந்த பாஜக வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி காங்கிரசில் இணைந்து, லிங்கா யத்து வாக்குகள் காங்கிரஸ் கட் சிக்குதான் என வெளிப்படையாக அறிவிக்க வைத்துவிட்டார்கள். இந்த விவகாரம் கர்நாடகா வில் பாஜகவுக்கு கடும் பின்னடை வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. லிங்காயத்துகள் பெரும் பான்மையாக இருக்கும் தொகுதி கள் பாஜகவின் கோட்டையாக இருக்கும் நிலையில், நடப்பு சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கோட்டையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பிரத மர் மோடி யாரை நம்பி கர்நாடகா வில் 2 நாள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறாரோ, அந்த சமூகம், அவ ரது கட்சியையும், அவரையும் வேண்டாமென்று புறந்தள்ளி காங்கி ரஸ் கட்சிக்கு வாக்களிக்க உறுதி மொழி எடுத்துள்ளது களம், ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தளத்தை விட சுவா ரஸ்யமாக மாறிவிட்டது.