states

img

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்தவர் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் ரத்து

புதுதில்லி, ஏப்.18- லக்கிம்பூர்-கெரி விவசாயிகள் கொலை வழக்கில்  முக்கியக் குற்ற வாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதி மன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது என்றும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்குவதற்கு முன் ஏன் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. விவசாயிகள் விரோதச் சட்டங் களை எதிர்த்து கடந்த ஓராண்டாக  நடந்த விவசாயிகளின் போராட்டத் திற்கு அடி பணிந்த ஒன்றிய அரசு வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப்பெற்றது.

இதற்கிடையில் வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக  2021 அக் டோபர் 3-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்-கெரியில் விவசாயி கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவும்  அவரது ஆதர வாளர்களும்  காரை ஏற்றி கொடிய வன்முறையை அரங்கேற்றினர். இதில் நான்கு விவசாயிகள்,  ஒரு பத்திரிகையாளர் உட்பட  எட்டுப்பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் படு கொலை சம்பவத்தில்  ஒன்றிய உள் துறை இணை அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த பாஜக தலைவர் என்று கூறப்பட்டவருமான அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தான் முக்கியக்குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  உத்தரப்பிரதேசத் தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில்  2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இது பெரும் அதிர்ச்சியையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் மீது ஆஷிஷ் மிஸ்ரா நிகழ்த்திய வன்முறையை நேரடி யாகப் பார்த்த சாட்சிகளை, ஜாமீனில் வெளிவந்த ஆஷிஷ் மிஸ்ரா அச்சுறுத்து கிறார்; எனவே அவரது  ஜாமீனை ரத்துச் செய்ய வேண்டும் என விவ சாயிகள் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற த்தில் மனுத் தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் மாதம் சாட்சி ஒருவர் தாக்கப் பட்டார். தொடர்ந்து உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் காரணம் காட்டி சாட்சிகளை ஆஷிஷ் மிரட்டிவந்தார். ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு லக்கிம்பூர்-கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் இரு வேறு நிலைபாட்டை மேற்கொண்டது. விவ சாயிகள் கொல்லப்பட்டது கடுமை யானது என விமர்சித்த அதே நேரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆபத்தானவர் இல்லை என்றும் கூறிவந்தது. இந்த நிலையில் அமைச்சரது மகனின் ஜாமீனை திங்களன்று ரத்து செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய  அமர்வு, ஆஷிஷ்  ஒரு வாரத்தில்  சரணடைய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு “பொருத்தமில்லாத வாதங்களின் அடிப்படையிலானது” மட்டுமல்ல; ஜாமீன் வழங்குவதற்கு முன் பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை;  பாதிக்கப்பட்டவர்களுக்கு விசார ணைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள் ளது; உயர்நீதிமன்றம் அதன் அதிகாரவரம்பை மீறியுள்ளது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். “விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து உச்சபட்ச நடவடிக்கைக்கு செல்வதற்கு உரிமையானவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் வாய்ப்பு தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் எப்போதாவது உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டார்களா?” என்று இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி சூர்யகாந்த் கேள்வியெழுப்பினார். மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றம் பல பொருத்தமற்ற பரிசீலனைகளுக்கு சென்றுள்ளது; முதல் தகவலறிக்கையை “நிகழ்வுகளின் கலைக்களஞ்சியமாகக்” கருதியுள்ளது என்றும் அவர் விமர்சித்தார். உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, “குற்றம் கொடூரமானது. ஆனால் அது வேண்டுமென்றே நடந்ததா? இல்லையா? என்பது விசாரணையின் போது தான் ஆராயப்படும். உ.பி.அரசு சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. உண்மையை வெளிக் கொண்டுவருவதில் எந்த குறுக்கீடும் இல்லை” என்றார்.