states

வருங்கால வைப்பு நிதி வட்டியை வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு

புதுதில்லி, ஜூன் 12- தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை மட்டும், பயனாளர்களின் வங்கிக் கணக்கில், வரவு வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை என்பதை  வீட்டிலிருந்தே எஸ்எம்எஸ், ஆன்லைன், தவறிய அழைப்பு (மிஸ்டுகால்) என பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ளலாம். குறுந்தகவல் மூலமாக யுஏஎன் இணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள், வருங்கால வைப்பு நிதி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து ‘EPFOHO UAN’ என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் உங்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தவறிய அழைப்பு (மிஸ்டுகால்) யுஏஎன் இணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள், 011-22901406 என்ற எண்ணிற்கு, வருங்கால வைப்பு நிதி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து மிஸ்டு கால் எனப்படும் தவறிய அழைப்பை மேற்கொண்டால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.