அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானிகளை தேடும் பணி தொடங்கியுள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது, தொழில்நுட்ப அல்லது இயந்திர கோளாறு காரணமாக இது நடந்ததாக ராணுவம் கூறியது.
மே மாதத்தில் ககன்யானின் முதல் பயணம்
இந்தியாவின் முதல் மனித விண் வெளிப் பயணமான ககன்யான் விண்கலத்திற்கான நான்கு பயணங்களில் முதலாவது பயணம், மே மாதம் திட்ட மிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார். “முதல் சோதனை வாகனப் பணி,(TV-D1), மே 2023இல் திட்டமிடப்பட்டுள்ளது; அதைத் தொடர்ந்து இரண்டாவது சோதனை வாகனம் TV-D2 மிஷன் மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ககன்யானின் (LVM3-G1) சோதனைப் பணி நடக்கும்” என்று சிங் கூறினார்.
எச்3என்2: மகாராஷ்டிராவில் 2 பேர் பலி
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்ட மற்றும் கிராமப்புற சுகாதார மையங் களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் தானாஜி சாவந்த் தெரிவித்தார். எச்3என்2 (H3N2) இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் இரண்டு பேர் இறந்ததை அடுத்து, சுகாதார வசதிகளின் தயார்நிலை ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் வழிகாட்டுதல்கள் வெளியிடப் படும், என்றும் சாவந்த் மேலும் கூறினார். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
விசாரணையைப் புறக்கணித்த கவிதா
பிஆர்எஸ் தலைவரும், தெலுங் கானா முதல்வருமான கே.சந்திர சேகர் ராவின் மகளான கே.கவிதா, தில்லி மதுக்கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் (ED) மூன்றா வது சுற்று விசாரணையை வியாழனன்று புறக்கணித்தார். முன்னதாக, பதவியில் இருக்கும் ஒரு பெண்ணை ஏஜென்சி வர வழைக்க முடியாது என்று கூறி, அம லாக்கப் பிரிவை எதிர்த்து கவிதா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலை யில், கவிதாவின் பிரதிநிதி உரிய ஆவ ணங்களை அமலாக்கப் பிரிவு முன் சமர்பிப் பார் என்று தகவல்கள் தெரிவித்தன.
பழங்குடியினர் மீது துப்பாக்கிச் சூடு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 23 வயது பெண்ணின் மரணம் தொடர்பாக பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வன்முறை வெடித்த நிலையில், போலீசார் துப்பாக்கியால் சுட்ட தில் பழங்குடியினர் ஒருவர் உயிரிழந் தார். போராட்டக்காரர்கள் கற்களை வீசிய தாகவும் 13 போலீசார் காயம் அடைந்ததாக வும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டதாக குற்றம்சாட்டிப் போராடினர்.
சிபிஐ முன் ஆஜராக தேஜஸ்வி யாதவ் ஒப்புதல்
நில மோசடி வழக்கு தொடர்பாக மார்ச் 25-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி உயர்நீதிமன்றத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வியாழக் கிழமை ஒப்புக்கொண்டார். சிபிஐ அனுப் பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய தேஜஸ் வியின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவின் மகன் தேஜஸ்வி, இந்த மாதத்தில் சிபிஐயின் விசா ரணையை மூன்று முறை புறக்கணித்துள் ளார். அவரைக் குறி வைத்து மோடி அரசு, சிபிஐயை ஏவியுள்ளது.
சுங்கச்சாவடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மறியல்
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து ஜேடி(எஸ்) ஊழியர்கள் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையின் கனிமினிகே சுங்கச்சாவடியில் மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்த எக்ஸ்பிரஸ்வேயின் பெங்களூரு -நிடகட்டா பிரிவில் ஒரு பயணத்திற்கான கட்டணம் வாகனத்தைப் பொறுத்து ரூ.135 முதல் ரூ.880 வரை வசூலிக்கப்படுகிறது.
700 இந்திய மாணவர்களின் விசாக்கள் போலி
கனடாவில் 700 இந்திய மாணவர் களின் விசா ஆவணங்கள் போலி யானவை என கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள குடியேற்ற ஆலோசகரிடம் படிப்பு விசாவிற்கு விண்ணப்பித்து கனடா சென்ற மாணவர்கள், கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி யிடம் (CBSA) சமீபத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, ‘நாடு கடத்தல்’ கடிதங்களைப் பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்ற ஆலோசகர், விமான டிக்கெட் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகையைத் தவிர்த்து ஒரு மாணவருக்கு ரூ.16 லட்சத்துக்கு மேல் வசூலித்து, ஏமாற்றியுள்ளதாகத்தெரிகிறது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டியை அமெரிக்க செனட் புதன்கிழமை உறுதி செய்தது. 52-42 வாக்குகள் பெற்ற இவர் முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆவார். பணியிட பாலியல் துன்புறுத்தல் புகார்களை தவறாகக் கையாண்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள், இவரது நியமனம் நிலுவை யில் இருந்தது. “இந்தியாவில் எங்களின் முக்கியமான நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் எனது சேவையைத் தொடங்கத் தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளேன்” என்று கார்செட்டி கூறினார்.
பெங்களூரு துரஹள்ளி வனப்பகுதியில் பயங்கர தீ
பெங்களூரு துரஹள்ளி வனப் பகுதியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளித்தது. மலைப்பாங் கான பகுதியில் மாலை 6.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்புதுறையினர் உதவி யுடன் தீயை அணைத்தனர். தீயினால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
‘பாஜக அமைச்சர்களை மட்டுமே பேசவிடுவதா?’
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ஜனநாயகம் தாக்குத லுக்கு உள்ளாகி வருவதாகவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதில் “முன்னணி யில் இருந்து” முன்னிலை வகிக்கிறார் என்றும் கூறியுள்ளார். “கடந்த மூன்று நாட் களாக சபாநாயகர், பாஜக அமைச்சர்களை மட்டும் மைக்கில் பேச அனுமதிக்கிறார்; எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூட பேச அனுமதிக்காமல்; நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார்” என்று மஹூவா ட்வீட் செய்துள் ளார்.
‘சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது மோடிக்கு...’
தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் பிரதமர் நரேந்திர மோடியை நையாண்டியாக விமர்சித் துள்ளார். சிறந்த நடிகருக்கான பிரிவில் பிரதமர் மோடி பரிந்துரைக்கப்பட்டிருந்தால் இந்தியா மற்றொரு ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் என்று அவர் கூறினார். “[பிரதமர் மோடி] ஆட்சிக்கு வந்ததும் ரூ.15 லட்சம் [மக்கள் கணக்கில்] வரவு வைக்கப் படும் என்று கூறியிருந்தார். உங்களில் யாருக்காவது ரூ.15 லட்சம் கிடைத்ததா?” என்றும் ராமராவ் கேள்வி எழுப்பினார்.
கர்நாடக மின் ஊழியர்களுக்கு வெற்றி
கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPTCL) மற்றும் பெஸ்கோம் உள்ளிட்ட ஐந்து மின்சார விநியோக நிறுவன ஊழியர் சங்கங் கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றன. கர்நாடக அரசாங்கம் 20% ஊதிய உயர்வை அறிவித்ததைத் தொட ர்ந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. ஊதிய உயர்வு கோரி கர்நாடகாவில் மின் துறையில் பணிபுரியும் 60,000 ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.