states

ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மாவுக்கு பதவி உயர்வு!

சூரத், மே 5- ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதித்த சூரத் மாவட்ட  நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹதிராஷ் ஹஸ்முக்பாய் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. குஜராத் பாஜக அரசின், சட்டத்துறை யானது மொத்தம் 68 நீதிபதிகளின் இட மாற்றம் மற்றும் பதவி உயர்வுகளை அறி வித்துள்ளது. இதில், ஐந்து நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களில் ராகுலுக்கு தண்டனை வழங்கிய எச்.எச். வர்மா எனப்படும் ஹதிராஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.  சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்தி ரேட் (CJM) நீதிபதி பதவியிலிருந்து, ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக (ADJ) பதவி உயர்வு பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, அவ்வா ண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது, “நீரவ் மோடி,  லலித் மோடி அல்லது நரேந்திர மோடி  என அனைத்துத் திருடர்களின் பெயர்களி லும் மோடி என்று ஏன் இருக்கிறது?” என கிண்டலாக கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்தப் பேச்சானது, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக  எம்எல்ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்ச ருமான பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504-இன்  கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறி வித்து, கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கி னார்.

அப்போது ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.  இதையடுத்து, தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8-ன் படி 102(1)(e) அடிப்படையில், ராகுல் காந்தி  எம்.பி. பதவியை இழந்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான பங்களாவையும் காலி செய்ய வேண்டியதானது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கும் ராகுல் காந்தி, அதில் சாத கமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் சிறை செல்ல வேண்டிய சூழலும் உள்ளது.  இந்நிலையில்தான், ராகுலின் எம்.பி. பதவி பறிபோவதற்கும், அவர் 2 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 8 ஆண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிட முடியாத அள விற்குமான தீர்ப்பை வழங்கிய சூரத் தலை மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச். வர்மா-வுக்கு தற்போது குஜராத் பாஜக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது. எச்.எச். வர்மா சில மாதங்களுக்கு முன்பு தான், சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ் திரேட் நீதிபதியாக மாறுதல் செய்யப் பட்டிருந்தார். ஆனால், அடுத்த சில மாதங் களிலேயே அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.