தெஹ்ரான்,ஜூன் 19- இஸ்ரேலுக்கு ஆதரவாக எப்போது வேண்டு மென்றாலும் அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபடலாம் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் ஈரான் சார்பில் அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி, அமெரிக்காவுடன் மோதல் ஏற்பட்டால் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. சியோனிச ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்கா தீவிர மாக களத்தில் இறங்க விரும்பினால், ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு தக்க பாடம் கற்பிக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க ஈரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எங்கள் ராணுவ தலைவர்களுக்கு தேவையான அனைத்து முடிவுகளும் மேசையின் மீதே உள்ளன என்று எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் அமெ ரிக்காவுக்கு சரி செய்ய முடியாத சேதம் உருவாகும் என ஈரான் மதத் தலைவர்கோமேனி எச்சரித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையி லான போரின் போக்கை தீர்மானிப்பதில் அடுத்த வாரம் “மிகப் பெரியதாக” இருக்கும் என்று டிரம்ப் தெரி வித்திருந்தார். இப்போரில் அமெரிக்கா ஈடுபடுமா என்ற கேள்வி க்கு, நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என அவர் கூறி இருந்தார். இந்நிலையில் தான் மத்திய கிழக்கில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து வரும் தாக்குதலையும் ஈரான் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் எங்களிடமும் அமெரிக்காவை நிலைகுலைய செய்ய வைக்கும் முடிவு கள் உள்ளன என ஈரான் தெரிவித்துள்ளது.