states

அதானி குழும நிறுவனங்களில் கடன் வாங்கி அதானி குழும நிறுவனத்திற்கே ரூ.608 கோடி கடன்!

புதுதில்லி, மார்ச் 11 - ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் வெளி யிட்ட ஆய்வறிக்கை பின்னணியில், ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கான, அதானி குழுமத்தின் மோசடிகள் அம்ப லத்திற்கு வந்துள்ளன. அதானியின் உற வினர்கள் மற்றும் அதானி தொடர்புடைய போலி நிறுவனங்களின் பெயரில் கடன் பெறப்பட்டு, அந்தப் பணம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது, ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 622 கோடி கடன் பெறப்பட்டு, அதில் 608 கோடி ரூபாய், அதானி குழுமத்தின் மற்றொரு நிறு வனமான ‘அதானி பவர்’ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இது கடுமையான விதிமீறல் என்றும், ‘அதானி பவர்’ நிறுவனத்தின் இயக்குநர் முகேஷ் ஷா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட பொது முதலீட்டு நிறுவனங்கள் தவிர, பல தனியார் நிறுவனங்களையும் துணை நிறுவனங்களாக அதானி குழுமம் நடத்தி வருகிறது. இதில், ‘அதானி லாஜிஸ்டிக்ஸ்’ மற்றும் ‘அதானி எஸ்டேட்ஸ்’ ஆகிய பிரை வேட் லிமிடெட் கம்பெனிகள் மற்றும் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ மற்றும் ‘அதானி போர் ட்ஸ்’ ஆகிய அதானி குழுமத்திற்குச் சொந்த மான மொத்தம் நான்கு நிறுவனங்களிடம் இருந்து 622 கோடி ரூபாயை, அகமதா பாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ‘அதிகார்ப் எண்டர்பிரைசஸ்’ (Adicorp Enterprises) என்ற தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு வாங்கிய இந்த கடன் தொகையில் ரூ. 608 கோடியை அதே ஆண்டு ‘அதானி பவர்’ நிறுவனத்திற்கு ‘அதிகார்ப்  எண்டர்பிரைசஸ்’ கடனாக வழங்கி யுள்ளது. அதானி குழுமத்தின் துணை நிறுவ னங்களில் ஒன்றான இந்த ‘அதிகார்ப் எண்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் ஆடிட்டராக இருப்ப வர் முகேஷ் ஷா. இவர் ‘முகேஷ் ஷா அண்ட் கோ’ என்ற பெயரில் தணிக்கை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதேவேளை யில் அதானி பவர் நிறுவனத்தின் இயக்கு நராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலை யில்தான், முகேஷ் ஷா, தான் ஆடிட்டராக இருக்கும் நிறுவனம் பெற்ற பணத்தை, இயக்குநராக இருக்கும் நிறுவனத்திற்கு கடனாக வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடன் வழங்கியது விதிமீறல் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது.

‘அதானி எண்டர்பிரைசஸ்’ லிமிடெட் நிறுவனத்திடம் ரூ. 11.8 கோடி, ‘அதானி போர்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திடம் ரூ. 57.2 கோடி, ‘அதானி லாஜிஸ்டிக்ஸ்’ நிறு வனத்திடம் இருந்து ரூ. 543.1 கோடி, ‘அதானி எஸ்டேட்ஸ்’ நிறுவனத்திடம் ரூ. 10.1 கோடி என ஒட்டுமொத்தமாக ‘அதிகார்ப் எண்டர் பிரைசஸ்’, அதானி குழும நிறுவனங்களிடம் ரூ. 622 கோடியை கடன் வாங்கியுள்ளது. இந்த பணம் முழுவதும் எதற்காக கடனாக வாங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்ற போதும் அதே ஆண்டு ‘அதானி பவர்’ நிறு வனத்துக்கு கடனாக மாற்றப்பட்டு இருப்பது மோசடியில் ஈடுபட்டதற்கான வலு வான ஆதாரமாகவே கருதப்படுகிறது. 2020-இல் ஆண்டு வருமானம் ரூ. 64.3 கோடி என்றும் நிகர லாபம் ரூ. 68.6 லட்சம் என்றும் வருமானக் கணக்கு சமர்ப்பித் துள்ள ‘அதிகார்ப் எண்டர்பிரைசஸ்’ நிறு வனத்திற்கு அதானி குழும நிறுவனங்கள் 622 கோடி ரூபாய் கடன் வழங்கியதும், அவ்வாறு பெற்ற பணத்தை, அதானி குழு மத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ‘அதானி பவர்’ நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘அதிகார்ப் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் நஷ்டக் கணக்கை காட்டியுள்ளதால், இந்த நிறுவனம் மற்றும் முகேஷ் ஷா ஆகியோர்  மீது புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை யும் எழுந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு ‘அதிகார்ப் எண்டர் பிரைசஸ்’ அதானி குழுமத்திற்குச் சொந்த மான வேறு சில நிறுவனங்களிடம் இருந்து ரூ. 553.28 கோடி கடனாக வாங்கியுள்ளது. இந்த கடன் தொகை குறித்து அதானிக்கு சொந்தமான பொது முதலீட்டு  நிறுவனங்க ளின் தணிக்கை அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது.  எனவே, அதானி குழுமம் மோச டியில் ஈடுபட்டுள்ளதாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் குற்றம் சுமத்திய நிலை யில், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தும் வகையில் ‘அதிகார்ப் எண்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் பணப்பரிவர்த்த னையும் அமைந்திருப்பது கவுதம் அதானி க்கு மற்றொரு சிக்கலாக அமைந்துள்ளது.