states

மாநில அளவில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்

புதுதில்லி, பிப்.18- மாநில அளவில் ஜிஎஸ்டி மேல்முறை யீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என  13 மாநிலங்கள் வலியுறுத்தின என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புது தில்லியில் கூறினார். புதுதில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடை பெற்ற 49 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்  டத்தில் கலந்து கொண்ட பின், தமிழ்நாடு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “ஜிஎஸ்டி  மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. மத்திய மேல்முறையீட்டு தீர்ப்  பாயம் தொடர்பாக விவாதம் நடத்தப் பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறை யீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநி லங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநில  அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பா யம் முக்கியமான ஒன்று, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை விடுவிப்பது குறித்து ஒப்புதல் முழுமை யாக வழங்கப்படவில்லை. தணிக்கை அறிக்கை அடிப்படையில் 2020-21 ஆம்  ஆண்டுக்கான ரூ. 4,230 கோடி விடுவிக்கப்  பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடு விக்க கூட்டத்தில் வலியுறுத்தினேன்.  ஒரே  நாடு, ஒரே வரி என்பதில் நிறைய சிக்கல்கள்  உள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் என்றி ருக்கும் போது ஏன் இத்தனை நீதிமன்றங்  கள்? ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற  ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால், அதை செயல்  படுத்துவது கடினம்” என்றார்.