புதுதில்லி, நவ. 25 - வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரயில்வேயில் அதிநவீன தொழில்நுட்பங் களைக் கொண்ட ‘வந்தே பாரத் ரயில்கள்’ ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2023 ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற் கான தயாரிப்புப் பணிகள் சென்னை ஐசிஎப்-இல் நடந்து வருகின்றன. ஆனால், தற்போது நடந்து கொண்டி ருக்கும் உற்பத்தி நடவடிக்கைகளின் வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் 75 ரயில்களை இயக்கும் இலக்கை அரசாங்கம் எட்டுவது சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தயாரி ப்புச் செலவினம் என்று கூறப்படுகிறது.
18 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயில், முதலில் ரூ. 106 கோடியில் தயாரிக்கப்பட்டது. அந்த செலவினம் தற்போது, ரூ. 110 கோடி முதல் ரூ. 120 கோடியை எட்டியுள்ளது. புதிய வசதி கள், புதிய தொழில்நுட்பங்கள் இணைக்க ப்பட்டு கொண்டே வருவதால் செலவுத் த்தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இதனால் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது. ஒவ்வொரு மாதமும் ஏழு முதல் எட்டு ரயில்கள் தயாரிக்க வேண்டும். 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது ஒன்றிய அரசின் இலக்கு. அந்த இலக்கை எட்டும் வகை யில், சென்னை ஐசிஎப் மட்டுமன்றி, கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை யிலும் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் செலவின அதிகரிப்பு மற்றும் தயாரிப்புப் பணியில் மந்தம் ஆகி யவை இலக்கை எட்டுவதற்கு தடையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாட்டில் இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளன. டிசம்பரில் 6-ஆவது ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.