புதுதில்லி, ஏப்.7- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 390 காவல் நிலைய படுகொலைகள் நடை பெற்றுள்ளதாகவும், அதிக பட்சமாக குஜராத்தில் 53 மர ணங்கள் நிகழ்ந்துள்ளதாக வும் ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது. 2019 ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் நடந் துள்ள காவல் நிலைய மர ணங்கள் குறித்து மாநிலங்கள வையில் கேள்வி எழுப்பப் பட்டு இருந்தது. இதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணை யத்தின் (NHRC) தரவுகளை வைத்து, உள்துறை இணை யமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். அதில், “நாட்டிலேயே அதி கப்பட்சமாக குஜராத்தில் 53 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகா ராஷ்டிரா (46), மத்தியப் பிர தேசம் (30) ஆகிய மாநிலங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார். மேலும், “உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய அவ்வப்போது வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல் களின்படி, காவலில் உள்ள ஒருவரின் மரணம் (காவல் துறை அல்லது நீதித்துறை), இயற்கையாகவோ அல்லது வேறுவிதமாகவோ நடந்தால் இறப்பு நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்கப் பட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தொடர ஒன்றிய - மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தவறு செய்யும் அரசு ஊழியர் மீது தற்போதுள்ள விதிகள், நடை முறைகளின்படி கடும் நடவ டிக்கையும் எடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.