புதுதில்லி,ஏப்.10- அந்தமான் நிகோபர் தீவில் ஏப்ரல் 10 ஞாயிறன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் ஞாயிறன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் ஒரேநாளில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது. இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே என்ற பகுதியில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ. தொலைவில் ஞாயிறன்று மாலை 4.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.