states

img

“ஆபரேசன் சிந்தூர்” இன்னும் நிறைவடையவில்லை

“ஆபரேசன் சிந்தூர்”  இன்னும் நிறைவடையவில்லை

இந்திய விமானப்படை அறிவிப்பு

சனிக்கிழமை மாலை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்  பதற்றம் முடிவுக்கு வந்தது. இத னால் இந்திய எல்லை மாநிலங்களில் மெதுவாக இயல்புநிலை திரும்பி வரு கிறது. இந்நிலையில், “ஆபரேசன் சிந்தூர்” இன்னும் நிறைவடையவில்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் இந்திய விமானப்படை கூறு கையில், “பயங்கரவாதிகளுக்கு எதி ரான ‘ஆபரேசன் சிந்தூர்’ இன்னும் நிறை வடையவில்லை. தங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணிகளைத் துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக இந்திய விமானப்படை நிறைவேற்றி யுள்ளது. எனினும் சரிபார்க்கப்படாத தக வல்களை ஊகிப்பதையும் பரப்புவதை யும் தவிர்க்க வேண்டும் என வேண்டு கோள் விடுக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.