states

திருச்சி முக்கிய செய்திகள்

குறுவை சாகுபடி ஆய்வு

திருவாரூர்,  செப்.6 -  திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம், புழுதி குடி, குறிச்சிமுலை, பாண்டி.கள்ளிக்குடி, நெடும்பலம் ஆகிய பகுதி களில் சாகுபடி செய்யப் பட்டுள்ள குறுவை சாகு படியினை வேளாண் துறை ஆணையர் சுப்ர மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொ டர்ந்து, குறுவை தொ குப்பு திட்டம் குறித்து விவ சாயிகள் மற்றும் அலுவ லர்களிடம் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருத் துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து உட்பட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்த னர்.

உ.பி. சாமியாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை, செப்.6- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்க ளுக்கு ரூ.10 கோடி சன்மா னம் தருவதாக கொலை  மிரட்டல் விடுத்த அயோத் தியைச் சேர்ந்த ரவுடி சாமியார் பரமஹன்ச ஆச்சாரியாவை கண்டித் தும், அவரை கைது செய்யக் கோரியும் மயி லாடுதுறை மாவட்டம்  முழுவதும் செவ்வா யன்று மாலை திமுக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகே பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முரு கன் தலைமையில், உ.பி  சாமியாரின் உருவ பொம்மையை எரித்தும்,  அவரது படங்களை கிழித் தும் கண்டன முழக்கங் களை எழுப்பினர். 

அரசுப் பள்ளியில்  பேரிடர் கால ஒத்திகை

பேராவூரணி, செப்.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு, பேராவூரணி தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தீத்தடுப்பு செயல் விளக் கம் மற்றும் வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி நடத்தப் பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியை இ.அன்புமேரி வரவேற்றார். பேரா வூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்  துறை அலுவலர் சீனி வாசன் தலைமையிலான குழுவினர், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதனை எதிர்கொள்வது, மழை, வெள்ளக் காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு மேற்கொள் வது, வெள்ளத்தில் சிக்கி யவர்களை எப்படி காப் பாற்றுவது என்பன உள் ளிட்ட பல்வேறு பயிற்சி களை ஆசிரியர்களுக் கும், மாணவ, மாணவி களுக்கும் வழங்கினர்.  ஆசிரியர் கே.நீலகண்டன் நன்றி கூறினார்.

அரசு பொது நூலகம் மீண்டும்  கொள்ளிடம் பகுதிக்கு மாற்றப்படுமா?

வாசகர்கள் எதிர்பார்ப்பு

வாசகர்கள் எதிர்பார்ப்பு கொள்ளிடம், செப்.6 - கொள்ளிடத்திலிருந்து, 3 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் பழைய கட்டி டத்துக்கு மாற்றப்பட்டுள்ள அரசு பொது  நூலகத்தை மீண்டும் கொள்ளிடத் துக்கே கொண்டு வர வாசகர்கள் வலி யுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் கடைவீதியில் அரசுக்கு சொந்தமான  பொது நூலகம்  கடந்த 40 ஆண்டுகளாக  வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.  இங்கு வாசகர்கள் அதிக எண்ணிக்கை யில் வந்து படித்து வந்தனர். இதனால்  கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார  பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயன டைந்தனர். அனைத்துத் துறையிலான நூல்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாங்கி, பாதுகாக்கப்பட்டு வந்தது.  சொந்த புதிய கட்டடத்துக்கு மாற்றாமல், பழைய வாடகைக் கட்டடத்துக்கு மாற்றுவதா? இந்த கட்டிடத்தில் பாதுகாப்பும், வாசகர்களுக்கு போதிய வசதியும் இல்லாததால், கொள்ளிடத்தில் புதிதாக  கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நூலக கட்டிடத்திற்கு, இந்நூலகத்தை மாற்ற  வேண்டுமென்று வாசகர்கள் தொடர்ந்து  வலியுறுத்தினர்.  ஆனால் கடந்த ஆகஸ்ட் 16 அன்று  முதல் இந்த நூலகத்தை கொள்ளிடத்தி லிருந்து மூன்று கி.மீட்டருக்கு அப்பால், தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள சுமார் 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பாதுகாப்பற்ற ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றியுள்ளனர். வாசகர்கள் இங்கே வராததால் நூலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.  வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த  நூலகத்தை, கொள்ளிடத்தில் புதிதாக  கட்டப்பட்டுள்ள அரசுக்குச் சொந்தமான நூலக கட்டிடத்துக்கு மாற்றாமல் மீண்டும் பழமையான வாடகை கட்டிடத் திற்கு மாற்றியிருப்பதால், அரசு பணம்  வீணடிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நூலக அதிகாரி இதுகுறித்து நேரில் பார்வையிட்டு, அரசுக்கு சொந்தமான நூலக கட்டிடத்திற்கு மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள்,  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், உதவித்தொகை வழங்கல்

கும்பகோணம், செப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் துறை  அலுவலர் வி.சீனிவாசன் தலைமையில்  மாற்றுத்திறனா ளிகளுக்கான மருத்துவ சான்று வழங்கும் முகாம் கும்ப கோணத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கத்தின் மாவட்ட  துணை தலைவர் பழ.அன்புமணி தலைமையில் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு சான்று பெற உதவினர். முகாமில் 59 பேருக்கு, மருத்து வர்கள் ஆய்வுக்குப்பின் சான்றும், UDID-க்கான பதிவும்  வாரியப் பதிவும் செய்து தரப்பட்டது.  கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், 2  மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர், 2 பேருக்கு  மாற்றுத் திறனாளிகள் இறப்பு ஈமச்சடங்கு தொகை தலா  ரூ.17 ஆயிரம், 3 பேருக்கு காது கருவி, 10 காது கேளா தோருக்கு கைப்பேசி என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பி லான உதவிகளை வழங்கினார். மேலும் ஐஓபி வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின்கீழ் கணினி பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் கோட்டாட்சி யர் சான்றுகள் வழங்கினர்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்தக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.6 - மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்தக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மருத்துவ செலவின தொகையை  உடனே வழங்க வேண்டும். காசில்லா மருத்துவ சிகிச்சையை அமல்படுத்த வேண்டும். பேக்கேஜ் டீல் என ஓய்வூதியர்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலை வர் ரெங்கராஜன், மெட்ரோ திருச்சி செயலாளர் எஸ்.கே. செல்வராஜ், ஓய்வூதிய சங்க திருச்சி கிளை செயலாளர்  பன்னீர்செல்வம், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சந்தப்படுகை மக்கள்

கொள்ளிடம், செப்.6- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை  கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியில்  அமைந்துள்ள இந்த கிராமத்தின் சார்பில், ஆற்றங்கரையை ஒட்டி  வளர்ந்துள்ள சீமை கருவேல முள்செடிகள் அகற்றப்பட்டன.  மேலும், அந்த இடங்களில் கிராமத்தின் சொந்த செலவில் தென்னை மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கும் பணி நடந்து வரு கிறது. ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பல வகையான மரக் கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை பணியாளர்களைக் கொண்டு நட்டாலும், அவைகளை முறையாக பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. இத னால், மரக்கன்றுகளை முறையாக நட்டு இறுதிவரை வளர்க்க  வேண்டும் என்ற முயற்சியில் சந்தப்படுகை கிராமம் ஈடுபட்டுள்ள னர். இதனைத் தொடர்ந்து ஆற்றின் கரையோரப் பகுதியில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டு, கிராமத்தின் சார்பில் இரும்பு  கூண்டு வாங்கி, அதை ஒவ்வொரு கன்றுக்கும் பாதுகாப்பாக வைத் துள்ளனர். இவற்றுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அறிவுறுத்தல்

தஞ்சாவூர், செப்.6-  செப்.18 அன்று விநாயகர் சதுர்த்தி விழா  நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொ ருட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், தொடர்புடைய துறை அலு வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்றத் தின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலை  அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பா ளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட  அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின் னரே சிலை அமைத்திட அனுமதிக்கப்படும். களிமண் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக் காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே அமைத்திட  வேண்டும். அமைக்கப்பட உள்ள சிலை களின் உயரமானது பீடத்துடன் சேர்த்து, 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 3 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.  சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும்  கரைக்கக்கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் வெடிப்பதற்கு  அனுமதியில்லை. விநாயகர் சிலைகளை  மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும், தமிழ்நாடு மாசுக்  கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.  விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதல் களை முழுமையாக பின்பற்றி, சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பில்லாத வகையில் கொண்டாட வேண்டும்” என்றார்.

பகுதிநேர வேலையை நம்பி சுய விவரங்களை  இணையத்தில் பதிவு செய்ய வேண்டாம்

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை கொள்ளிடம், செப்.6 - சுய விவரங்களை எந்த இணையதளத்திலும் பதிவு  செய்ய வேண்டாம் என்று மயிலாடுதுறை மாவட்ட சைபர்  காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார்.  இதுகுறித்து கொள்ளிடம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மாவட்ட சைபர் கிரைம்  காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் கூறுகையில், “தற்போது பகுதிநேர வேலை என்ற பெயரில், பொது மக்களிடம் மிகப்பெரும் மோசடி நடந்து வருகிறது. இதில்  அதிகளவில் பாதிக்கப்படக் கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள்.  இவர்கள் வேலைவாய்ப்புகளை தேடுவதற்காக, தங்களது சுய விவரங்களை லிங்க்டு இன், இண்டீட், நாக்ரி டாட் காம் உள்ளிட்ட இணையதளங்களில் பதிவிடு கின்றனர். இதன்மூலம், குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட வர்களின் சுய விவரங்களை திருடி விடுகின்றனர். மேற்கண்ட பகுதி நேர வேலை உள்ளது எனக்கூறி சில தொகைகளை கட்டச் சொல்லி பல லட்சங்களை சுருட்டி  விடுகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிநேர வேலை களைப் பயன்படுத்த வேண்டாம். அதேபோன்று, தங்க ளுடைய சுய விவரங்களை தேவையின்றி எந்த இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டாம்.  மேலும், பிரபலமான நிறுவனங்களின் பெயரில் ஆன்-லைன் ஜாப் மற்றும் இணையதளம் மூலமாக போலி யான வேலைவாய்ப்புகள் உள்ளதாக குறுஞ்செய்தி விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக் கூடும்.  இதுபோன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நிகழ்ந்துவிட்டால், மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம்  காவல் நிலையத்தை அணுக வேண்டும். அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் இலவச உதவி எண். 1930-க்கு 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண் டால், உங்களது பணம் மீட்டு தரப்படும்.  தேவையில்லாத லிங்க்-களை தொடவோ, தெரி யாத எண்ணிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கவோ வேண்டாம். கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில், இளைஞர்கள் பலர் இதுபோன்று ஏமாற்றப் பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கை யுடன் செயல்பட வேண்டும்” என்றார்.