சென்னை,ஜூன் 8- பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோ சனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு அண்ணா பல்கலை க்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. நீட் தேர்வு முடிவுகள் வெளி யான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வருகிற 20 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினம் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி இறுதி நாள். 22 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 3 1ஆம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடைபெறும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.