கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை வடமேற்கு வங்காள விரி குடாவிற்கும் மேற்கு - மத்திய வங்காள விரிகுடா விற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக இடை விடாமல் மழை பெய்து வரு கிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலை யில், திருவனந்தபுரம், கொல் லம், பத்தனம்திட்டா, ஆலப் புழா, எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்க ளில் மிதமான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, மலப்புறம் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.