states

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறுக!

சென்னை, நவ. 16 - மக்களைப் பாதிக்கும் வகையிலான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறு மாறு, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு கூட்டம், நவம்பர் 15 அன்று சென்னை யில் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு  திட்டங்கள்) சட்டம்- 2023’ தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கடந்த ஆண்டு முழுமையான விவாதமின்றி குரல் வாக்கெடுப்பில் நிறை வேற்றப்பட்டது. அப்போதே விவசாயிகள் அமைப்புகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின. இதனிடையே, அண்மையில் விதிமுறைகள் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 250 ஏக்கருக்குக் குறையாத நிலப்பரப்பில் நீர் நிலைகள் இருந்தாலும், பல்வேறு திட்டங்களுக்கும், தேவைகளுக்கும் அவசியம் எனக் கருதினால்,  அதனைத் தனியாருக்கு வழங்கும் அதிகாரத்தை இச்சட்டம் அரசுக்கு அளிக்கிறது. இதன் மூலம் கையகப் படுத்தப்படும் நிலங்களில் உள்ள நீர்நிலை கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், கால்வாய்கள், மேய்ச்சல் நிலங்கள் என அனைத்தும் அந்தத் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும்.  இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நிலமில்லாமல் போகும் நிலை ஏற்படும். மக்களின் பொதுத் தேவைக்கு பெரும் சிரமம் ஏற்படும். நீர்நிலை களை, மேய்ச்சல் நிலங்களை மக்களும் கால் நடைகளும் பயன்படுத்தும் வாய்ப்பும் அற்றுப்போகும். சுற்றுச்சூழலும் பாதிப்புக் குள்ளாகும்.  ஏற்கெனவே அமலில் உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நீர் நிலைகள் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தடையாக இருப்பதை சரிகட்டும் நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சட்டம் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் இல்லை. இது கார்ப்பரேட்டுகளுக்கே பலனளிக்கும். எனவே, மக்களின் நலன்களுக்கும், பொ துத் தேவைகளுக்கும் பலவிதமான பாதிப்பு களை ஏற்படுத்தும் தமிழ்நாடு நில ஒருங்கி ணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டு மென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசை  வலியுறுத்துகிறது.

வேளாண் திட்டங்களுக்கான மின்னணு சர்வேயில் மாணவர்களைப் பயன்படுத்துவதை கைவிடுக!

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை உருவாக்கு வதற்கு  அனைத்து மாநிலங்களி லும் மின்னணு முறையில் சர்வே செய்து அறிக்கை அனுப்ப ஒன்றிய அரசு கோரி யுள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள் ளது.  தமிழகத்தில் நிலத்தின் அளவு, நிலத் தின் தன்மை, சாகுபடிப் பரப்பு,  பயிர்களின் விபரம், விவசாயிகள் எண்ணிக்கை, கடன் விபரம் உட்பட கிராமங்கள் தோறும் சென்று கணக்கிடும் பணியை வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாண வர்களின் தேர்வுகள், கல்விச் சுற்றுலா உட்பட ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய கணக்கெடுப்புகள் வழக்க மாக வருவாய்த்துறை - கிராம அலுவலர்கள்  மூலமே எடுக்கப்பட்டது. படிக்கும் மாணவர்க ளை இதற்குப் பயன்படுத்துவது பொருத்த மானதல்ல. அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வே எடுக்கச் சென்ற இரண்டு மாணவிகளை வரப்பில் பாம்பும், விஷப்பூச்சியும் கடித்துள்ளன. எனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மின்னணு கணக்கெடுப்பை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும், மாணவர்களைப் பயன் படுத்துவதைக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

ஆசிரியர் பணி நியமன பணியிடங்களை அதிகரித்திடுக!

தமிழகத்தில் 2013-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி 19,000 பட்டதாரி ஆசி ரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு  பின்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம்,ஆசிரியர் நியமனத்துக்கான எந்த தேர்வுகளையும் நடத்தவில்லை. இந் நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத் தேர்வில் 40,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள போதிலும் 3192 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில் தற் போது 14,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3192 பணியிடங்களுக்கு மட்டுமே நியமனம் என்பது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கை யாகாது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக் கும் நிலையில் தற்போதுள்ள காலிப்பணியிட ங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ ன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்களில் கூறப் பட்டுள்ளது.