states

‘அனைத்து மாநிலங்களிலும் நாங்களே ஆள்வோம் என சட்டம் இயற்றி விடுங்கள்!’

ஷிமோகா, ஜூன் 27 - மகாராஷ்டிர மாநில ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதியில் ஈடுபட்டிருப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலை வரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஷிமோகாவில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குமாரசாமி மேலும் கூறியதாவது:-  மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. அங்கு பாஜக ‘ஆபரேஷன் தாமரை’யில் ஈடுபட்டுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன.  கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, இங்கும் அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்த்த னர். தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர்.  நாட்டில் தங்களை தவிர மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று பாஜக-வினர் விரும்பு கின்றனர்.  இதற்குப் பதிலாக அனைத்து மாநிலங்களி லும் தாங்களே ஆட்சியில் இருக்கும் வகை யில் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் சட்டம்  இயற்றிக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகளின் வேலையாவது மிச்சமாகும். அவர்கள் வீடுகளிலேயே ஓய்வு எடுத்துக்கொள் வார்கள். இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.