states

தமிழர்கள் ஓட்டுப்போடாததால் ஆளுநராகிறோம்

சட்டம் ஒழுங்கிற்கும்  அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்?

அமைச்சர் உதயநிதி பதிலடி

அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆத ரவாக வாக்கு சேகரிக்க விமானம் மூலம் கோவை வந்தார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக முன்வைக் கப்படும் கருத்துக்கு, மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள். கமல ஹாசனின் பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுக கட்சியினர் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பொறுத்தி ருந்து பார்க்கலாம் என பதிலளித்தார்.  சட்டம் ஒழுங்கு குறித்து அண்ணா மலை இடம் கேள்வி கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலைக்கும் சட்டம்  ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.

கோவை, பிப்.20 தமிழர்கள் எங்களுக்கு ஓட்டுப்போடாமல் புறக்கணிப்ப தால், ஒன்றிய அரசு எங்களை ஆளு நர் ஆக்கியுள்ளது என தமிழிசை  செளந்தரராஜன் செய்தியாளர்களி டம் வெளிப்படையாக தெரிவித்தார். கோவை பிஎஸ்ஜி கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் பணியாளர் கள் தின விழா திங்களன்று கொண்  டாடப்பட்டது.  இதில் புதுச்சேரி மற்  றும் தெலுங்கானா ஆளுநர் தமி ழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர்,  பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண் டாட வேண்டும், அந்த எண்ணம் தற்  போது தோன்றுகிறது. மாநிலங்க ளில் அதை அமல்படுத்த திட்டமி ருக்கிறது. ஆளுநர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி அவர்களால் உள்துறை அமைச்சரால் தேர்ந்தெ டுக்கப்படுவதாகும். தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் போன்றவர்களை அங்கீ கரிக்கவில்லை. தமிழ்நாடு மக்கள் எங்  களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கியிருந்தால், நாங்களும் மத்  திய அமைச்சராகியிருப்போம். அது  நடைபெறவில்லை, ஆகையால், மத்திய அமைச்சகம் எங்கள் திற மையை கண்டு ஆளுநராக ஆக்கி  உள்ளது. எங்களைப் போன்ற வர்கள் திறமை மிக்கவர்கள். எனவே அவர்களை அடையாளம் கண்டு  கொள்ளுங்கள். இதைச் சொன்  னால் அது குறித்து சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் வரக்  கூடும். மக்கள் திறமையானவர் களை கண்டு கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தமிழ்  நாடுசட்டம் ஒழுங்கு குறித்து நான்  பேச இயலாது நான் ஆளுநர். ஆகவே, அண்ணாமலையிடம் கேளுங்கள் என்றார்.