சென்னை, ஜூலை 30- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர் பான ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகி றது. இப்பணிகளை 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்கும் வகை யில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழ கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள எடப்பாடி பழனி சாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுக சார்பில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிற்கு கடிதம் எழுதி யுள்ளார்.