‘வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு’ (உரைநடையாக்கம்: ந.மு.தமிழ்மணி) நூல் வெளியீட்டு விழா திங்களன்று (செப்.5) தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, பேரா.வீ.அரசு பெற்றுக் கொண்டார். உடன் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, பாரதி புத்தகாலய பதிப்பாளர் க.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.