புதுதில்லி மார்ச் 26- விவாதம் இல்லாமல் வெறும் 12 நிமிடங்களில் 2023-24 ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றம் அங்கீகரித் துள்ளது. இது நாடாளுமன்ற ஜனநாய கத்தை மோடி கேலி செய்வதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமளியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு
அதானி குழுமத்திற்கு எதிராக அமெ ரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக் கம் அளிக்கவும்,விவாதம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதனை திசை திருப்புவதற்காக நடப்பு கூட்ட தொடரில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடா ளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆளும் பாஜக அவை நடவ டிக்கைகளை சீர்குலைத்து அமளியில் ஈடு பட்டது. நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட மோடி அரசு இரண்டு முறை தோல்வியுற்ற பட்ஜெட்டை மீண்டும் நிறைவேற்ற வியாழனன்று ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ஆம் ஆண்டிற்கான மானியங்கள் மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக் களுக்கான கோரிக்கைகளை முன்வைத் தார்.
சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அனைத்து அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகளை முன் வைத்தார். இந்த நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் வெவ்வேறு அமைச்சகங்களுக்கான மானி யங்கள் குறித்து எந்த விவாதமும் இல்லா மல் வெறும் 12 நிமிடங்களில் அன்றைய தினமே மாலை 6 மணிக்கு ஒன்றிய பட்ஜெட்டை நிறைவேற்றியது மோடி அரசு. சபாநாயகர் ஓம் பிர்லா பெயரளவில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங் களை வாக்கெடுப்புக்கு விட்டார். ஆனால் அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராக ரிக்கப்பட்டன. விவாதம் இல்லாமல் பட்ஜெட் மசோதா வை நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”2023-24 பட் ஜெட்டை விவாதம் இல்லாமல் வெறும் 12 நிமிடங்களில் நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. இந்திய மக்களின் பெயரில் ரூ.45 லட்சம் கோடி திரட்டப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பரிசீல னையின்றி செலவிடப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற ஜனநாய கத்தை மோடி கேலி செய்கிறார்” எனக் கூறி யுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மோசமான செய்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன் னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம் பரம் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப் பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் இருந்து வரும் மோச மான செய்தி என்னவென்றால் விவாதம் இல்லாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப் பதுதான். மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்காமலேயே ரூ.45, 03,097 கோடி திரட்டப்பட்டு மக்களுக்காக செலவிடப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.