states

பொதுத்தேர்வுக்கு தடையற்ற மின்சாரம்

சென்னை, மே 3- தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது தடையற்ற மின் விநியோகத்திற்கான, அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யு மாறு, மண்டல தலைமைப் பொறியாளர்க ளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப் படாத 10, 11 மற்றும் ஓராண்டு தடைபட்ட  12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்  தேர்வுகள், வியாழனன்று தொடங்கு கிறது. தேர்வுகளின்போது தடையற்ற  மின் விநியோகம் வழங்க அனைத்து  மண்டல தலைமைப் பொறியாளர்க ளுக்கும் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொதுத்தேர்வு நடை பெறும்போது தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை  எடுக்க அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்யவும்  தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்க ளில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், பராமரிப் புக்காக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட  பொதுத்தேர்வின் போது மின் தடை  ஏற்படக்கூடாது என்று உத்தரவிடப்பட் டுள்ளது.