5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு புயல்
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி “தேஜ்” என்ற புய லாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து ஞாயிறன்று காலை அதி தீவிர புயலாக வலு வடைந்தது.இந்த “தேஜ்” புயல் அடுத்த 3 தினங்களில் நகர்ந்து அக்.24 அன்று ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும் என்றும், கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 115 முதல் 125 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே போல் சனிக்கிழமையன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஞாயிறன்று காலை ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு தெற்கே நிலவி வரும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும். பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு “ஹமூன்” என பெயரிடப்பட்டுள்ள நிலையில், “ஹமூன்” புயல் ஆந்திர மாநிலத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக வும் கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் இந்தியா வில் இரண்டு புயல்கள் உருவாவது இதுவே முதல்முறை யாகும். ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தாக்க உள்ள தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 2 புயல் களால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சி.எம்.இப்ராஹிம்
மதச்சார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) பாஜக கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரி வித்த ஜேடிஎஸ் மாநில தலைவர் சி.எம். இப்ராஹிம் கட்சியில் இருந்து நீக்கப்பட் டார். புதிய மாநிலத்தலைவராக குமார சாமியை தேவகவுடா நியமித்தார். இந் நிலையில், தொழில்நுட்ப ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் இன்னும் ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளேன். ஆனால் பாஜகவுடன் கைகோர்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண் டும். இதற்கு எதிராக சட்டப் போராட்டம் உட்பட எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்” என இப்ராஹிம் கூறினார்.
குஜராத்தில் ரூ.17.5 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள்
பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி கையில் அம்மாநில துறைமுகங் கள் சென்ற நிலையில் போதைப் பொருள், பினாமி நிறுவனங்கள் மூலம் போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் கடத்தல் சம்ப வங்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. நேர்மையான அதிகாரிகள் மூலம் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டால், கடத்தல் சம்பவம் குறித்து பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வரும். இதுதான் குஜராத் மாநில துறைமுகங் களின் உண்மை நிலைமை என்ற நிலை யில், ஞாயிறன்று குஜராத் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளான நாடியாட், சூரத், அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகரங்க ளில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (எப்டிசிஏ) நடத்திய சோதனை யில் 17.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் பறி முதல் செய்யப் பட்டுள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட தாகவும் கைது செய்யப்பட்டவர்கள் பினாமி நிறுவனங்களின் மருத்துவ பிரதி நிதிகளாக பணிபுரிந்து, போலி மருந்து களை மருத்துவர்களுக்கு வழங்கினர் என்று எப்டிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் குஜராத் மக்கள் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர்.
அத்தியாவசியமான எரிபொருட்களை தடுக்கும் இஸ்ரேல்
காசா, அக்.22- எகிப்து-காசா எல்லையான ரஃபாவின் வழியே சனிக்கிழமை அன்று உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் அடங்கிய 20 ட்ரக்குகள் பாலஸ்தீன மக்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் போதாது என்றும்; மருத்துவமனைகள் இயங்க எரிபொருட்கள் அவசியம். அதை இஸ்ரேல் ராணுவம் தடுக்கிறது எனவும் ஹமாஸ் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். காசாவிற்குள் உணவு, தண்ணீர், மருந்துகள் செல்வதை இஸ்ரேல் தடை செய்திருந்தது. ஐநா சபை உள்ளிட்ட பல நாடு கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் எகிப்து மற்றும் காசா எல்லையான ராஃபா வில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருந்த நிலையில் காசாவிற்குள் நுழையவிடாமல் குண்டுகளை வீசி வந்தது இஸ்ரேல் ராணுவம். இந்நிலையில், அக்டோபர் 21 அன்று உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய 20 வாகனங்கள் மட்டும் காசாவிற்குள் அனுப்பப்பட்டுள்ளது. மின்சாரத் துண்டிப்பால் 7 மருத்துவமனைகள், 21 சுகாதார நிலையங்கள் செயல்படாத நிலைமைக்கு சென்றுவிட்டன. அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர எரிபொருட்கள் அவசியம். ஆனால் இஸ்ரேல் எரிபொருட்களை அனுமதிக்க மறுக்கிறது என ஹமாஸ் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் குண்டு வீசி தாக்கியதில் 55 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய சில மணிநேரங்களில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி 30க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்தது. போர் துவங்கியதில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் இதுவரை 1400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட, பெண்கள் இளைஞர்கள் என 4,651 பொதுமக்களும் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14,245க்கும் அதிக மான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிக மானவர்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
2 நாட்களில் சிறப்பு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம்!
சென்னை,அக்.22- தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள் ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (அக்.20) சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இதில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகள் உடன் 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப் பட்டன. அதன் மூலம் 1,51,305 பயணி கள் பயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (அக்.21) தினசரி இயக்கக்கூடிய பேருந்து களுடன் கூடுதலாக 950 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப் பட்டன. இந்தப் பேருந்துகளிலும் ஏராளமா னோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமா னோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள தாக போக்குவரத்து துறை தெரி வித்துள்ளது. இவர்கள் தங்கள் ஊர்களி லிருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து சனிக்கிழமையும் ஏராளமானோர் ரயில்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து. கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன் பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க கூட்டம் அதிக மாக காணப்பட்டது.
அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை நீதிமன்ற காவல்
சென்னை, அக்.22- பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது. சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடி கம்பம் வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழி யர்கள் அந்த கொடி கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவ தற்காக ஜேசிபி வாகனம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பாஜகவினர் ஜேசிபி வாக னத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கெனவே பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர் களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வும், தாக்கியதாகவும், பொதுசொத் துக்களை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதி மன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் நீண்டகாலம் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு விருது
சென்னை,அக்.22- தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். அதில் கணிசமானோர் பெண் காவலர்கள். கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பான செயல் பாட்டை பாராட்டி ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப் படும் உயரிய கவுரவமான ‘குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையில் 1973-ஆம் ஆண்டுதான் முதன் முதலில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட னர். அப்போது ஒரு காவல் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தம் 22 பெண் கள் பணியில் சேர்ந்தனர். ஆனால் தற்போது 35,329 பெண் காவல் அதிகாரி கள் மற்றும் காவலர்கள் பணியில் உள்ளனர். காவல்துறை பணியில் பெண் கள் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறை வடைகிறது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் பொன் விழா கொண்டாடப் பட்டது. இந்நிலையில் பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை, அக்,22- சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கலைவாணன் என்ற இளை ஞரை, முன்விரோதம் காரணமாக பி.வி.காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர் ராஜ் கடந்த 2017 செப்டம்பரில் கற்கள் மற்றும் மூங்கில் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரையும் எம்கேபி நகர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிபதி.புவனேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜ ராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்தார்.