states

திரிபுரா பாஜக எம்எல்ஏ கட்சியிலிருந்தும் ராஜினாமா

அகர்தலா, செப்.23- திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம் கார்புக்  தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பர்பா மோகன் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், கட்சிப் பொறுப்பிலிருந்தும் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தியிடம் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், பதவி விலக வேண்டாம் என்று பர்பா மோகனைக்  கேட்டுக் கொண்டேன், ஆனால் அவர் பதவி விலகுவதில் உறுதியாக இருந்தார் என்றார். ஏற்கெனவே திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் பிரிஷாகேது டெபர்மா தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். தற்போது பர்பா மோகனும் ராஜினாமா செய்துவிட்டதால் சட்டமன்றத்தின் பலம் 58-ஆக குறைந்துவிட்டது. தற்போது பாஜக-விற்கு 35, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 ஐபிஎஃப்டிக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

;