திருவிதாங்கூர் சமஸ்தான கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப்பெரும் தியாக வரலாறு படைத்த ஒன்றாகும். இன்றைய குமரி மாவட்டம் தேச விடுதலைக்கு முன் திருவிதாங்கூரின் பகுதி யாக இருந்தது. குமரி மண்ணில் பிறந்த ஜீவா வும் சி.பி.இளங்கோவும் தமிழக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் ஆக இருந்தபோதிலும் அவர்களை குமரி மண்ணில் நுழையவிடாமல் மன்னராட்சி கவனமாக இருந்தது. இப்பகுதியில் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதல் கிளை மார்த்தாண்ட த்தில் உருவானது. அதன் செயலாளர் தோழர் ஜி.எஸ்.மணி. 1942ல் உருவான அந்த முதல் கட்சிக் கிளையில் ஜி.எஸ்.மணி , கே.எம்.ஸ்ரீதர், கோபி, சோமன் நாயர், முத்தையன், ஸ்டூவர்ட் ஆகியோர் இருந்தனர். 1945-இல் நாகர் கோவில் கிளை உருவாக்கப்பட்டது. இதில் சோமு, வேலாயுதம், தானப்பன், முத்துசாமி, எம்.எம். அலி ஆகியோர் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள்,
பனை யேறும் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழி லாளர்கள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், நிலமற்றோர் என பலதரப்பினரையும் சங்கமாக்கினார் ஜி.எஸ். மணி. குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கிற போராட்டத்தில் ஜி.எஸ். மணி முக்கிய பங்காற்றினார். மொழிவழி மாநிலப் போராட்டத்தின் முன்னோடி தோழர் ஜி.எஸ்.மணி. துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் உயிர்தப்பினார். 1968இல் குழித்துறை நகர்மன்றத்திற்கு பம்மம் வார்டிலிருந்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் குமரி மாவட்ட உழைப்பாளி மக்களின் குரலை எதிரொலித்தார். பல ஆண்டுகள் சிறை வாசம், சித்ரவதைகள், தலைமறைவு வாழ்க்கை என தன் வாழ்நாள் முழுமையும் மக்களுக்காகவே வாழ்ந்த ஜி.எஸ்.மணி 1979 அக்டோபர் 5 அன்று சென்னை பொது மருத்துவமனையில் மரணமடைந்தார். - ஹஸன்