states

டாலருக்கு மாற்றாக சொந்த நாணயங்களில் வர்த்தகம் பிரிக்ஸ் கூட்டமைப்பில் தொடரும் விவாதம்

பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பு நாடுகளின்  வெளியுறவுத் துறை  அமைச்சர்கள் அதிகாரிகள் கூட்டம்  ஜூன் 10 அன்று ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் (Nizhny Novgorod) நகரில் நடைபெற்றது.  தென்னாப்பிரிக்கா தலைமையில் நடை பெற்ற கடந்த கூட்டத்தில் எகிப்து, எத்தி யோப்பியா,  ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய  அரபு எமிரேட்ஸ், அர்ஜெண்டினா ஆகிய 6 நாடுகள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டன.  அதன்  பிறகு 2023 இறுதியில் அர்ஜெண்டினாவின் தீவிர அமெரிக்க ஆதரவு வலதுசாரி ஜனாதிபதி ஜேவியர் மிலேய் பிரிக்ஸ் உறுப்பினராக விரும்ப வில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  உள்ளூர் நாணயங்களில் பரிவர்த்தனை    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு மாற்றாக  உறுப்பு நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தில் வர்த்தகத்தை முன்னெடுக்க வேண்டும்.  இதற்காக பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளூர் கரன்சிகள் மூலம்  பணம் செலுத்தும் முறை  மற்றும் அதற்கான இணையதளங்கள் ஆகியவற்றை முறையாக பரிசீலித்து  அதுகுறித்து பிரிக்ஸ் தலைவர் களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஜோகன்னஸ்பர்க்-2 பிரகடனம் தொடர்பாக விவாதித்துள்ளனர்.  புதிய வளர்ச்சி வங்கியை உருவாக்குதல் மேலும் பிரிக்ஸ் பிளஸ்  உறுப்பு நாடுகளின் பரிவர்த்தனை மற்றும்  நிதி பாதுகாப்பிற்காக  உறுப்பினர் தலைமையில் தேவைகளுக்கு ஏற்ப இயங்கக் கூடிய  கொள்கையைப்  பின்பற்றும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய வளர்ச்சி  வங்கி குறித்து அனைத்து நாடு அமைச்சர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வங்கிக்கு  பல வகைகளிலிருந்து நிதி திரட்டுவதற்காக புதுமையான நிதியளிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தவும், வளரும் நாடுகளின் அறிவுத்திறன்  உட்பட திறன் மேம்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்தை மேம்படுத்தவும், உறுப்பு நாடுகளுக்கு உதவவும் ஆதரவு தெரிவித்தார்கள். இந்த வங்கி மூலம் ஒவ்வொரு உறுப்பு  நாடும் அவர்களின் நிலையான வளர்ச்சிக் கொள்கையை அடையும் திறன் மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்த வேண்டும் எனவும் இந்த வங்கி  பலதரப்பு மேம்பாட்டு நிறுவனமாக இருக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே எரிசக்தி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்க த்தையும் அமைச்சர்கள் வெளிப்படுத்தினர். மலிவு விலையில் உள்ள, அணுகக்கூடிய, நம்பகமான, நிலையான மற்றும் நவீன எரிசக்தி உற்பத்திக்கான பொருட்கள் உலகளவில்  கிடைப்பதை  உறுதிசெய்யும் வகையிலான  விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   இக்கூட்டத்தில் சர்வதேச அளவில் அதிகரித்து  வரும் உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் -பாலஸ்தீன போர் குறித்தும்  விவாதிக்கப் பட்டுள்ளது.  2024 ஆம் ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு ரஷ்யா தலைமையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  புதிய உறுப்பினர்களை  வரவேற்ற இந்தியா இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அமைச்சர்கள் அறிவிப்புக்கு முன்னதாக பிரிக்ஸ்  நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றதால் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் பங்கேற்க வேண்டிய இக்கூட்டத்தில்  இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சக பொருளாதார உறவுகள் பிரிவின் செய லாளரும் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரியு மான  தம்மு ரவி தலைமையிலான  குழு பங்கேற்றது.  விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பிரிக்ஸ் குடும்பத்தின் இந்த  கூட்டத்தில் பங்கேற்றுள்ள  புதிய உறுப்பினர்களை இந்தியா முழு மனதுடன் வரவேற்கிறது என இந்திய  வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டர் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.