states

சாதிச் சான்று சரி பார்க்க டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்

சென்னை, மே 3- கடந்த 1996-97 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  குரூப் 4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவி யாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர், கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறி, பட்டியலினத்தவர் சாதிச்சான்று பெற்றி ருந்தார். பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை  பெயரில் பெற்ற சாதிச்சான்றை சமர்ப் பிக்கும்படி, அரசுப் பணியாளர் தேர்வாணை யம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச்  சான்று செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக் கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர் வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர் வாணையம் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், திலகவதி அமர்வு, பட்டிய லினத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்க ளுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர் வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை.  எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட  முடியாது. அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளு படி செய்ய கூறும். அதேசமயம், ஜெயராணி யின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதன் மீது விசாரணை நடத்தி 6 மாதங்களில் உரிய முடிவை மாவட்டத்தில் குழு எடுக்க வேண்டும். இந்த குழுவின் விசா ரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக் கத்தை  ஜெயராணி தரப்பு வழங்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளது.