states

கோவிலில் சாமி கும்பிடச் சென்றவரை கட்டிவைத்து தீப்பந்தத்தால் சூடு

டேராடூன், ஜன.14- மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த இளைஞர் மீது தீப்பந்தம் கொண்டு தாக்கு தல் நடத்தப்பட்டது.   உத்தர்கண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் பைனொல் கிராமத்தைச் சேர்ந்த வர் 22 வயது ஆயுஷ். பட்டியல் இனத்தைச்  சேர்ந்த இவர் கடந்த 9-ஆம் தேதி அண்டை கிராமமான சல்ராவில் உள்ள இந்து  கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்றுள் ளார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த  மாற்று சமூகத்தினர் ஆயுஷ் கோவிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தினர். மேலும், ஆயுஷை தாக்கி, கட்டி வைத்து இரவு முழுவதும் கொள்ளிக்கட்டைகளால் சித்ரவதை செய்துள்ளனர்.  ஆயுஷ் ஜனவரி 10-ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஆயுஷ் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், சல்ரா கிரா மத்தைச் சேர்ந்த ஐந்துபேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்  பட்டுள்ளதாக உத்தரகாசி காவல் கண்கா ணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரி வித்துள்ளார்.