states

img

சாதியக் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்

சென்னை,ஜன.11- புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசித்து வந்த பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக தமிழ்நாடு  சட்டப்பேரவையில் புதனன்று  சிபிஎம் உறுப்பினர் எம்.சின்னதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் (பாஜகவை தவிர்த்து) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசிய தாவது:   சாதிக் கொடுமையை சான்றோர் களே தவறு என்று உணரச் செய்து  தனது கல்வியால் சட்டமும் கல்வியும்  கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத் கர். அத்தகைய மாமேதை பிறந்த  மண்ணில் சாதியப் பாகுபாடு, தீண்டா மை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடை பெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்ட னத்திற்கும் உரியது, கண்டிக்கத் தக்கது.

மனிதக் கழிவு கலந்த சம்பவம் நான் அறிந்தவுடன், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வும், தடையின்றி குடிநீர் கிடைக்க உறுதி செய்யவும், தேவையான நட வடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் 27 அன்று புதுக்கோட்டை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர்  அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்டதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்ற னர். தொடர்ந்து அந்த கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு நோய்த் தடுப்பு பணிகளையும், மருத்து வப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, குடிநீர் குழாய்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்றப்பட்ட குடிநீரை மாதிரி எடுத்து அறந்தாங்கி சுகாதார மையத்தில் பரிசோதித்ததில் நீர் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கு ரூ. 2 லட்சம் செலவில் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு ஜனவரி 5 முதல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  அத்துடன் புதிய மேல்நிலைத் தொட்டி ரூ. 7 லட்சம் செலவில் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாரி மூலம் தினசரி காலை, மாலை குடிநீர்  விநியோகிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதுவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகின்றது. அந்தவகையில் இதுவரை 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில் நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக் கற்களாக அமைந்து விடுகின்றன. சமூகத்திலுள்ள இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி மத வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, ‘மதம் உன்னை  மிருகமாக்கும் சாதி உன்னை சாக்கடை யாக்கும்’  என்ற பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் வார்த்தைகளை மனதிலே கொண்டு, நாம் அனை வரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஆனால், சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள்  இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவிலே கொள்ளவேண்டும்.  இவர்களையெல்லாம் தாண்டி, சாதி,  இன, மத வேறுபாடுகள் அனைத்தை யும் களைந்து, நாம் அனைவரும் சமஉரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்கவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடு வோர் மீது இரும்புக் கரம் கொண்டு  மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.