states

குறைபாடுகளை சரிசெய்யாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் இல்லை

சென்னை,பிப்.21- கூட்டுறவு சங்கங்களின் உறுப்பி னர்கள் பட்டியலிலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்யும் வரை, தேர்தல் அறிவிக்கப்படாது என்று கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதி மன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்க ளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு  தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது,  தகுதியில்லாத பலர், கூட்டுறவு  சங்கங்களின் உறுப்பினர்களாக அவசர கதியில் சேர்க்கப்பட்டதாக வும், தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த, தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி திருத்தங்கள்  மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க  தடை விதிக்க கோரி ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கூட்டுறவு சங்கங்களை திறமையான முறையில் நிர்வகிக்கும் வகையில், உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பெயரையும், இடம் மாறிய உறுப்பினர்களின் பெயரையும் நீக்கி ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியில் புதிய உறுப்பினர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசுக்கு கடந்த 2022ம் ஆண்டு மார்ச்  10 ஆம் தேதி கடிதம் அனுப்பி உள்ளேன். இந்த பரிந்துரைகளை அமல்படுத்த அரசு,

இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போதைய நிலை யில் தேர்தலை நடத்த அனு மதித்தால் அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மாநிலம் முழுவதும் உள்ள  கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த வர்கள், இடம் மாறியவர்களின் பெயரை நீக்கி, தகுதியான உறுப்பி னர்களை சேர்த்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும்”  என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதி பதி பரத சக்கரவர்த்தி அமர்வில் செவ்வாயன்று (பிப்.21) விசார ணைக்கு வந்தபோது, உறுப்பினர்  பட்டியலை திருத்தி அனுப்பும்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்க ளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள் ளதாகவும், குறைபாடுகளை நீக்கா மல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்த தமிழக அரசு, இப்பணிகளை முடிக்க ஆறு  வாரகால அவகாசம் வழங்க கோரியது.