states

img

இரவு வானில் இல்லாமல் போகும் நட்சத்திரங்கள்

 ஒளி மாசு அதிகரிப்பதால் நட்சத்திரங்களை இரவு வானில் இனி பார்க்கமுடியாது என்று விஞ்ஞானி கள் கூறுகின்றனர். ஒளி உமிழ் விளக்குகளின் (Light Emitting diodes LEDs) பெருகிவரும் பயன்பாட்டால் பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங் களை நம்மால் பார்க்கமுடியாமல் போய்விடும். மனிதர்கள் மற்றும் வன உயிரினங்களின் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கிறது. முன்பு கோடைகாலத்தின் மேகங்கள் இல்லாத தெளிவான இரவு வானில் இருட்டில் பின்னணி யில் பால்வீதி நட்சத்திரங்களை பார்க்கமுடிந்தது. ஆனால் இப்போது அது இயலாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது இரவு வானம் இருட்டாக இல்லை. சாம்பல் நிறமாக உள்ளது. எங்கோ மின்னும் ஒரு சில நட்சத்திரங் களை மட்டுமே பார்க்கமுடிகிறது. பூமி ஒளி உமிழ் விளக்கு கள் மற்றும் பிறவகை வெளிச்சமூட்டும் முறைகள் பூமி செயற்கை ஒளியில் மூழ்கியுள்ளது.

மனிதனால் ஒளி வீசும் வானம்

விவேகமில்லாமல் பயன்படுத்தப்படும் வெளிப்புற விளக்குகள், ஒளி உமிழ் விளக்குகள், ஒளிர்தல், விளம்பரங் கள், பிரகாசிக்கும் விளையாட்டு இடங்கள் போன்றவை நட்சத்திரங்களைப் பார்க்கவிடாமல் நம் கண்களைக் குருடாக்குகின்றன. 2016இல் வானியலாளர்கள் உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு இரவுவானில் நட்சத்திரங் களைப் பார்க்கமுடியவில்லை என்று கூறினர். ஒளி மாசு அப்போது முதல் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித் துள்ளது. இன்னும் இருபது ஆண்டுகளில் பால் வீதியில் இருக்கும் பெரும்பாலான நட்சத்திரக் கூட்டங்களில் இருக்கும் விண்மீன்களை நம்மால் காணமுடியாமல் போய்விடும். இந்த பாதிப்பு அறிவியல்ரீதியாகவும் கலாச் சார ரீதியாகவும் வரும் காலத்தில் தீவிரமடையும். இரவு வானம் மனித வாழிடச்சூழலில் ஒரு முக்கிய அங்கம். வரும் தலைமுறையினருக்கு இயற்கை தந்த இந்த அரிய செல்வம் மனிதக் குறுக்கீடுகளால் மறுக்கப்படுகிறது. இன்றுள்ள இளம் தலைமுறையினர் ஒரு பறவைக் கூட்டைக் காணமுடியாதது போல வரும் தலைமுறையினர் இருட்டு வானில் நட்சத்தி ரங்களைப் பார்க்கமுடியாமல் போகும்.

இது பற்றி கவலைப்பட நீங்கள் ஒரு வானிய லாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பறவையியல் நிபுணர் இல்லை. ஆனால் தோட்டத்தில் பாடும் பறவைகள் எவையும் இல்லாமல் போனால் அது எவ்வளவு பெரும் துயரம் என்பதை நம்மால் உணரமுடியும் என்று இருட்டு வானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இங்கி லாந்து (யுகே) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் வானியலாளர் மார்ட்டின் ரீஸ் கூறுகிறார். விளக்குகள் பொருத்தப்படும் முறை, ஒளி அடர்த்தி, ஒளி விழும் திசை பற்றிய கட்டுப்பாடுகள், வெளிப்புற விளக்குகள் கவனமாக மூடப்படுதல், அவற்றில் இருந்து வரும் ஒளி கீழ்நோக்கி விழும்படி செய்தல், அவை உமிழும் பிரகாசத்தின் அளவைக் கட்டுப்படுத்துதல், விளக்குகள் பெரும்பாலானவையும் நீல வெள்ளை நிறக் கதிர்களை உமிழாமல் சிவப்பு ஆரஞ்சு நிற ஒளியை வெளிவிடுமாறு செய்தல் மற்றும் விதிமீறல்களுக்கு கடும் அபராதம், தண்டனை போன்ற கடும் சட்டதிட்டங்கள் மூலமே இதை ஒழுங்குபடுத்தமுடியும். இதை உடனடியாகச் செய்யவில்லை என்றால் “எண்ணற்ற ஒளிக்கீற்றுகள் ஓவியம் வரையும் அழகு வானம்” என்று ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் வர்ணித்துள்ளது போல இனி நம்மால் என்றும் பார்க்க முடியாமல் போய்விடும்.

வானத்தை ஆக்கிரமிக்கும் புவியின் செயற்கை ஒளி

ஒவ்வொரு ஆண்டும் ஒளி மாசினால் இரவு வானில் ஒளியின் அளவு 10% அதிகரிக்கிறது. இதனால் ஒரு தலை முறையினர் அதன் வாழ்நாளில் அதிக பிரகாசத்துடன் ஒளி வீசுவதை மட்டுமே பார்க்கமுடியும். இன்று பிறக்கும் ஒரு குழந்தை 250 விண்மீன்களைப் பார்க்கமுடியும் என்றால் பதினெட்டாவது வயதில் 100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்கமுடியும் என்று ஜெர்மன் புவியியல் ஆய்வுமைய விஞ்ஞானி கிறிஸ்டோபர் கைபா கூறுகிறார்.

வானம் பார்த்து மகிழ்ந்த தலைமுறையினர்

ஒன்றிரண்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இரவு வானில் ஒளி வீசும் பால்வீதி மண்டலத்தின் பெரும் பாலான நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இன்று இது மிக அரிய காட்சி. உரிய வசதியுள்ளவர்களல் மட்டுமே இப்போது இத்தகையவற்றைக் காணமுடியும். பெரும்பாலான உலக மக்களுக்கு இது காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது. 1980களில் புகை பிடித்தலால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு இல்லா மல் இருந்தது போல இன்று மக்கள் ஒளி மாசினால் உரு வாகும் தீமைகள் பற்றி அறியாமல் வாழ்கின்றனர். வானியல் ரீதியாக மட்டும் இல்லாமல் இது மனிதன் உள்ளிட்ட உயிரி னங்களின் உடல், மன நலத்தை பாதிக்கிறது என்பதால் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்று மாட்ரிட் பாலிடெக்னிக் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆஸ்கர் கோர்ச்சோ (Prof Oscar Corcho) கூறுகிறார்.

வழிகாட்டும் நிலவின் ஒளி

கடல் ஆமைகள், வலசை செல்லும் பறவைகள் நிலவின் ஒளியால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றன. வானில் ஏற்படும் ஒளி மாசு இவற்றை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் இந்த உயிரினங்கள் வழி மாறிச் சென்றுவிடு கின்றன. பறவைகள், மற்றும் பிற விலங்குகளுக்கு முக்கிய உணவான பூச்சிகள் செயற்கை வெளிச்சத்தால் கவரப்படு கின்றன. கொல்லப்படுகின்றன. ஒளி உமிழ் விலக்குகளில் இருந்து வரும் நீல ஒளி இயற்கையான சிவப்பு மற்றும் அகச்சிவப்பு கதிர்களை முற்றிலும் தடுக்கிறது. இதனால் இந்த ஒளிக்கற்றைகளால் ஏற்படும் நன்மை களை நாம் இழக்கிறோம். சிவப்பு ஒளி நம் உடலில் படும்போது அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் உயர் அளவைக் குறைக்கிறது. மெலட்டோனின் (Melatonin) உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. ஒளி உமிழ் மற்றும் டையோடு விளக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து நன்மை தரும் சிவப்பு மற்றும் அது போன்ற ஒளிக்கதிர்கள் செயற்கை நிறமாலை மற்றும் நம் கண்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. இது உடற்பருமன், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம் என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி கண் மருத்துவப் பிரிவு பேராசிரியர் ராபர்ட் ஃபாஸ்பரி கூறுகிறார். இந்த நிறக்கதிர்களால் நோயாளிகள் விரைவாக குணமடைகிறார்களா என்பதை பரிசோதிக்க லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி விஞ்ஞானிகள் மருத்துவமனை கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூடுதல் அகச் சிவப்பு விளக்குகளைப் பொருத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இது புவிக்கோளின் முகச்சாயையே மாற்றும். ஒளி உமிழ் விளக்குகளை மேலும் சூழலிற்கு நட்புடையதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இம்முயற்சி மிகப்பெரியது என்றாலும் மனிதர்களின் ஆரோக்கியத்தை விளக்குகள் ஏற்படுத்தும் ஒளி மாசு மோசமாக பாதிக்கிறது என்பதால் இதை செய்தே ஆகவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.