states

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய ஆட்சியர்!

போபால், ஜூன் 22- பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத் தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியொன்றில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணை யர் ஆகிய, 2 அரசு உயர் அதிகாரி கள் கலந்துகொண்டது கடும் கண்ட னங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக  ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலை யில், ஜூன் 11 அன்று சாட்னாவில் நடை பெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் (‘சமர்பன்  சமரோ’), மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா மற்றும் நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி ஆகியோர் கலந்து  கொண்டுள்ளனர். நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், ஆர்எஸ் எஸ்-சின் பகவத்துவஜம் எனப்படும் காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தி, உறுதிமொழியும் ஏற்றுள்ளனர்.  இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அரசு உயர் அதிகாரிகளின் இந்த செயல் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு மதவெறி அமைப்பின் நிகழ்ச்சியில், அரசு அதி காரியான மாவட்ட ஆட்சியரும், நக ராட்சி ஆணையரும் எப்படி கலந்து கொள்ளலாம் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா, “இந்த நடத்தை அரசு ஊழியர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதில்லை. இது போன்ற அதிகாரிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரபட்சமின்றி தங்கள் கட மையை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.  “இதுபோன்ற அதிகாரிகளை தேர் தல் பணிகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்” என காங்கிரஸ் மாநிலங்க ளவை உறுப்பினர் விவேக் தன்கா தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இந்த இருவர் மீதும் மாநிலத் தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இவ்வாறு எதிர்ப்பு எழுந்த  நிலையிலும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா கேட்டுள்ளார்.  “மாநில அரசின் அட்வகேட் ஜென ரல் பிரசாந்த் சிங்குடன்தான், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக வும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்ட ஒரு பொதுநிகழ்ச்சி என்பதால், அதில், பங்கேற்றதில் எந்த  தவறும் இருப்பதாக நான் உணர வில்லை” என்று அனுராக் வர்மா கூறி யுள்ளார்.

நகராட்சி ஆணையர் ராஜேஷ்  ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில்,  “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது,  நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடி யாது என்பதால், கையை மடக்கி  ‘துவஜ்’ செய்தோம்; அதற்காக நாங்கள்  குறிப்பிட்ட சித்தாந்தத்தை சார்ந்த வர்கள் என்றோ, அல்லது அந்த சித்தாந்  தத்தை ஊக்குவிக்கிறோம் என்றோ  அர்த்தம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் அரசு ஊழியர்கள், சில சம யங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து  கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவர்கள் மீது நிர்வாக ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற நிலையே ம.பி. மாநி லத்தில் தற்போது உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் பங்கேற்ப தற்கு, 1981-ஆம் ஆண்டே அன்றைய காங்கிரஸ் அரசு தடை விதித்தது. “மத்தி யப்பிரதேச மாநில சிவில் சர்வீஸ் சட்டம், 1965-இன் படி, “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அல்லது அத்தகைய அமைப்புகளின் எந்தவொரு நிகழ்விலும் எந்தவொரு அரசு ஊழியரும் பங்கேற்பது பிரிவு 5(1) இன் கீழ் நடத்தை விதிகளை மீறு வதாகக் கருதப்படும்” என 2003-ஆம்  ஆண்டு சுற்றறிக்கையும் வெளியிட்டது. “ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்; அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவுடன், பணியில் இருந்து நீக்கலாம்” என்று அந்த சுற்ற றிக்கையில் தெரிவித்தது. “அரசு கட்ட டங்கள் அல்லது அரசு வளாகங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், அவற்றைத் தடுக்க தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றும் உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தடைகளை 2006-ஆம் ஆண்டு, பாஜக முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் நீக்கிவிட்டார்.  “ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சி களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்  தாது” என்று கூறிவிட்டார். இதனால்,  இந்த இரு அதிகாரிகள் மீது, நிர்வாக  ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது  என்பது குறிப்பிடத்தக்கது.