states

நூல் விலை குறைக்கப்படும்: அமைச்சர்

சென்னை,ஏப்.13- நூல் விலை உயர்வை குறைப் பதற்கு மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, நூல் விலை உயர்வு  குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது  தங்கமணி(அதிமுக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்.), டி. ராமச்சந்திரன் (சிபிஐ) ஆகி யோர் உரையாற்றினர். அதிமுக சார்பில் உரையாற்றிய தங்கமணி,“தமிழ்நாட்டில் விவசாயத் திற்கு அடுத்ததாக ஜவுளிதுறை உள்ளது. ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்  திருப்பூர் மாவட்டத்திலிருந்து மட்டுமே வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது உயர்ந்துள்ள நூல் விலை  உயர்வால் பின்னலாடை மட்டுமல்லா மல் விசைத் தறி தொழிலும் அழிந்து வருகிறது” என்றார். ஜவுளித் தொழிலை நம்பியிருந்த சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் பாதித்திரு க்கிறார்கள். எனவே, நூல் விலையை குறைத்து தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை  விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி  துறை அமைச்சர் ஆர்.காந்தி,“ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று செஸ்வரியை முதலமைச்சர் முழுமையாக தள்ளுபடி செய்த முதல மைச்சர், தற்போது உயர்ந்துள்ள நூல் விலையை குறைக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதையும் விளக்கமாக  கூறினார். தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகள் பஞ்சுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சார்ந்துள்ளன. மேலும், பஞ்சு மீதான இறக்குமதி வரி  3 விழுக்காட்டில் இருந்து 11 விழுக் காடாக உயர்ந்துள்ளது. இதை முற்றி லும் நீக்க வேண்டும் என்றும் பருத்தி  விளையும் காலமான அக்டோபரி லிருந்து மார்ச் வரை நூற்பாலைகள் கொள்முதல் செய்கிற பருத்திக்காக வங்கிகளிடம் இருந்து பெறப்படும் நடைமுறை மூலதனக் கடனுக்கான வட்டியில் 5 விழுக்காடு மானியமாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் பருத்தி ஏற்றுமதிக்கும் பருத்தி  மற்றும் பருத்தி விதைகள் ஊக வணி கத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சரிடம் மாநில அரசு கோரிக்கைவிடுத்துள்ளது என்றும்  தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளிக்கையில்,“பஞ்சு விலை  உயந்துள்ளதால் நூல் ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பால் விலை உயர்ந்துள் ளது. இதை குறைக்க வேண்டியது  ஒன்றிய அரசின் பொறுப்பாகும். இது குறித்து ஒன்றிய அரசின் கவனத்துக் கொண்டு சென்றிருக்கிறோம். முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நூல் விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.