states

மோடியின் வருகையையொட்டி மருத்துவமனைக்கு பெயிண்ட் அடித்து குஜராத் பாஜக அரசு அலங்காரம்!

அகமதாபாத், நவ.1- மோர்பி தொங்குபால விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் பார்த்து ஆறுதல் கூறு வார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. மோர்பி தொங்குபால விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.42 மணிக்கு நிகழ்ந்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் 3 நாட்  கள் சுற்றுப்பயணத் திட்டத்தில்  இருந்த பிரதமர் மோடி, விபத்து சம்பவத்தை அறிந்ததும் குஜ ராத்தில் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். எனினும், மோர்பி பால விபத்தில் உயிர்பிழைத்து மருத்  துவமனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியிருந்தன.  இதன்படி, பாதிக்கப்பட்ட மக் களைத் திங்கட்கிழமையன்றே பிர தமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அவர் செல்ல வில்லை. மாறாக, செவ்வாய்க் கிழ மைதான் அவர் மருத்துவமனைக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. பயணத்திட்டம் மாற்றி அமைக்கப் பட்டதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இந்நிலையில், தொங்குபால விபத்தில் சிக்கி 100-க்கும் மேற் பட்டோர் சிகிச்சை பெற்றுவரும் மோர்பி அரசு மருத்துவமனையை, அம்மாநில பாஜக அரசு அவசர அவசரமாக வண்ணங்கள் தீட்டி அலங்காரப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் மற்றும் கூரையில் புதிதாக வண்ணம் பூசி யும், புதிய நீர் குளிரூட்டிகளை அமைத்தும், வார்டுகளில் உள்ள பெட்ஷீட்களை மாற்றியும் மருத்துவ மனையின் தோற்றத்தை மாற்றி வரு கிறது. இதுதொடர்பான புகைப்படங்  கள் சமூக வலைதளங்களில் வெளி யான நிலையில், கடும் கண்டனங் களுக்கு உள்ளாகியிருக்கிறது. மருத்துவமனைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, அங்கு அவர்  நல்ல புகைப்படங்களை எடுப்ப தற்காகவே இந்த ஏற்பாடுகள் மேற்  கொள்ளப்பட்டு வருவதாக காங்கி ரஸ் சாடியுள்ளது. மருத்துவமனை யில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயி ருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவமனையில் மேற் கொள்ளப்படும் வண்ணம் தீட்டும் பணிகள், ‘துயரச் சம்பவம்’ (Event of Tragedy) என்றும், அவர்களுக்கு (குஜராத் பாஜக ஆட்சியாளர்கள்) கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்கள் நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர்” என்றும் காங்கிரஸ் தனது டுவிட்டரில் பதி விட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன் னிட்டு மருத்துவமனையின் சுவர்  களில் வர்ணம் பூசப்படம் படங்  களை பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி,  “நாளை பிரதமர் மோடியின் போட்டோஷூட்டின் போது கட்ட டத்தின் மோசமான நிலை வெளிப்  பட்டுவிடக்கூடாது என்பதற்காக மோர்பி சிவில் மருத்துவமனையில் ஒரே இரவில் வர்ணம் பூசப்படுகிறது.  141 பேர் இறந்துள்ளனர். நூற் றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உண்மையான குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்  கப்படவில்லை. ஆனால், பாஜக  போட்டோஷூட் செய்து அனைத்தை யும் மறைக்க முயல்கிறது” என்று விமர்சித்துள்ளது.  “கடந்த 27 ஆண்டுகளில் பாஜக பணியாற்றியிருந்தால், நள்ளிரவில் மருத்துவமனையை அலங்கரிக்க வேண்டிய அவசியமில்லை” என் றும் ஆம் ஆத்மி குறிப்பிட்டுள்ளது.