states

நரிக்குறவர்களை அவமானப்படுத்திய அதிகாரி, பணியாளர் பணியிடை நீக்கம்

சென்னை, மே 26 - நரிக்குறவர் இன மக்களை  தரையில் அமர வைத்து உணவு அளித்த விவகாரத்தில்  இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் கடந்த  ஆண்டு அன்னதானம் வழங்கும் போது  நரிக்குறவ மக்களுக்கு உணவு அளிக்க  மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக் குறவ இன மக்களுடன் இணைந்து அன்னதா னம் சாப்பிட்டார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது சிலரை மட்டும் மேசையில் அமர வைத்து உணவளித்துள்ளனர். நரிக்குற வர் இன மக்கள் உள்ளிட்ட சிலரை தரையில்  அமர வைத்து உணவு அளித்துள்ளனர். இச்சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோயில் செயல் அலுவலர்  சிவசண்முக பொன்னி, சமையல் பணியாளர்  குமாரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம்  செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.