states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லியில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வரு வதால் அங்குள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்கு வெப்பத்தை தணிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

குஜராத்தின் மோர்பியில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த  விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிர தமர் மோடி தெரிவித்துள் ளார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் இன்சைட் விண்கலம், இந்த ஆண்டு இறுதியில் தனது பணியை நிறைவு செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மக்களின் கவனத்தை திசைத் திருப்ப மத வழி பாட்டு தலங்களை பாஜக குறிவைக்கிறது; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பகுஜன்  சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாஜகவை கடு மையாக சாடியுள்ளார்.

தொடர் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இத னால்  ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொது மக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருமூர்த்தி மலையில் சாரல் மழை பெய்து வருவ தால் பஞ்சலிங்க அருவி யில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வடமாநில தக்காளி வரத்து குறைவால் சென்னை புற நகர் பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது. புதனன்று கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.85-க்கும், புறநகர் பகுதி களில் 80 முதல் 90 ரூபா ய்க்கும் விற்பனையானது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடல்  பகுதியில் அதிகாலை யில் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி யது. இதனால் அப்பகுதி யிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் அச்சம் அடைந்தனர். 

பெங்களூருவில் மழை யால் சேதமடைந்த பகுதி களை கர்நாடக முதல்வர்  பசவராஜ் பொம்மை புத னன்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் புதனன்று மாலை சென்னை துறை முகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புத னன்று வழங்கப்பட்டது.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷானதா மற்றும் மிலன் ஜெயதிலகே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மே 9 ஆம் தேதியன்று போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்தான் இந்தக் கைது நடவடிக்கைக்குக் காரணமாக இருந்துள்ளது. தாக்குதலுக்குக் காரணமான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு 22 பேரைக் கைது செய்யுமாறு அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆணையிட்டதன் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இருவரும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் உள்துறை அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடி விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயை அமெரிக்காவுக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தினர். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டன் நீதிமன்றம் அசாங்கேயை அமெரிக்காவுக்கு அனுப்ப உத்தரவிட்டார். இந்த உத்தரவு பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று பிரிட்டனில் உள்ள மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

நடப்பாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அதிகரித்துள்ளதாக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு(ஓபெக்) கூறியுள்ளது. உற்பத்தி அதிகரித்தாலும் ஈரானின் ஏற்றுமதி அளவில் பெரிய மாற்றம் இல்லை என்றும் ஓபெக் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் உற்பத்தியின் அளவு 7.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.