சென்னை,செப்.15- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சி புரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடு களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர். திமுகவின் தேர்தல் அறிக்கை யில் கூறப்பட்டதன் அடிப்படை யில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்க ப்படுகிறது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில், காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கி றார். இந்நிலையில் விழா நடை பெறும் இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகி யோர் ஆய்வு செய்தனர்.
விண்ணப்ப பரிசீலனை தீவிரம்: இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய, இதற்காக கடந்த ஜூலை இறுதியில் இருந்து அக். 16-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட் டன. இடையே, தகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, முதி யோர் உதவித்தொகை பெறும் குடும்பங்கள், மாற்றுத்தினாளிகள் உதவித்தொகை பெறும் குடும்பங்க ளில் உள்ள பெண்களிடமும் விண் ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் 1.63 கோடி விண்ண ப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, விண்ணப்ப தாரர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் அரசிடம் உள்ள வரு மான வரித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகளு டன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதில், சந்தேகம் ஏற்படும் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு குறுஞ் செய்தி: செப்.15-ம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலை யில், 10-ம்தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது, ‘‘விண்ணப்ப பரிசீலனை, சந்தே கத்துக்குரிய வீடுகளில் கள ஆய்வு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந் ததும், தகுதியான பயனாளி களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்ப டும்’’ என்றனர்.