சென்னை, ஜன. 28- அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொ ருவரின் கடமை. அதை உறுதிப்படுத் தும் வகையில் கள ஆய்வுகளின் போது அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் முதலமைச்சர் வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்படி முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் முதற்கட்ட மாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் செயல்படுத்தப் பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தை கள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடு கள் மற்றும் அவற்றின் பயன்கள் பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடை வது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார்.
ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதி முதலமைச்சர், அப்பகுதி களில் உள்ள விவசாய சங்க பிரதிநிதி கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக் களையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார். அன்று மாலை, 4 மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளர்கள், காவல்துறை சரக துணைத் தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வார். அன்றைய தினமே, இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக, அமைச்சர் பெரு மக்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங் களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செய லாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகி யோர் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல் களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் முன்னிலை யில் அதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.