states

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

சென்னை,மே 2- இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக  மக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  அங்கிருந்து மக்கள் பலர் படகுகள் வழியாக தமிழகம் தப்பி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு தேவை யான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் களை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் அனுமதியை கோரியிருந்தது. இதற்கு  தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்  பட்டுள்ளதாக ஒன்றிய அரசுதெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு உதவும் தமி ழகத்தின் கோரிக்கையை ஏற்ற வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் எனவும் டுவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.